விஷாலுக்கு நம்பிக்கை கொடுத்த பூஜை!

vishalAபாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த பிறகு வெடி, சமர், பட்டத்து யானை என வரிசையாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த விஷாலுக்கு, சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த பாண்டியநாடு படத்தின் வெற்றி அவரை காலரை தூக்கி விட வைத்தது. அதையடுத்து நடித்த நான் சிகப்பு மனிதனும் ஓரளவு ஓடியது.

இந்த நிலையில், தன்னை வைத்து தாமிரபரணி படத்தை இயக்கிய ஹரி இயக்கத்தில் மீண்டும் பூஜை படத்தில் தற்போது நடித்து வரும் விஷால் அதிக நம்பிக்கையுடன் காணப்படுகிறார். ஏற்கனவே தனது ஒவ்வொரு படங்களிலும் அதிரடி ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹரி இந்த படத்தில் இன்னும் கூடுதல் ஆக்சனை புகுத்தியிருக்கிறாராம். படம் முழுக்க ஒரே அதிரடிதானாம்.

அதற்கேற்ப விஷாலும் வரிந்து கட்டி நடித்திருப்பதால் படத்தின் மீது அவர்களுக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், தீபாவளிக்கு ஷங்கரின் ஐ வருகிறது, விஜய்யன் கத்தி வருகிறது. கொஞ்சம் பாத்து சூதானமா நடந்துக்கோங்க என்று சிலர் விஷாலை உஷார் படத்தியபோதும், தீபாவளிக்கு பூஜையை வெளியிடப்போவது உறுதிதான். இது இப்ப எடுத்த முடிவல்ல, படத்தோடு பூஜை போடுறப்பவே எடுத்த முடிவு என்று தில்லாக பதில் சொல்லி வருகிறார் விஷால்.