கொடூரமான தோற்றத்தில் சிபிராஜ்!

Sibirajசிபிராஜின் தந்தை சத்யராஜ் அதிரடி வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவானவர். அவரைப் போலவே சிபிராஜ்க்கும் வில்லத்தனமான வேடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. அதனால்தான் நாணயம் படத்தின் கதையை கேட்டபோது ஹீரோ வேடத்தை பிரசன்னாவுக்கு கொடுத்து விடுங்கள் நான் நெகடீவ் ரோலில் நடிக்கிறேன் என்று கேட்டு வாங்கி நடித்தார். இந்த தகவலை அப்போது சிபிராஜே சொன்னார்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிபிராஜ், இப்போது நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் நடித்துள்ளார். அதிலும் ஹீரோ, வில்லன் என கத்தியில் விஜய் நடித்திருப்பது போலவே, சிபிராஜூம் டபுள் ரோலில் நடித்திருக்கிறார். இதுவரை அப்படத்தில் ஒரு நாயுடன் இணைந்து சிபிராஜ் நடித்திருப்பதாகத்தான் செய்திகள் வெளியாகின.

ஆனால், இப்போது அந்த படத்தின் ட்ரைலர் வெளியானதில இருந்து படத்தைப்பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது. அதாவது ஒரு கெட்டப்பில் சாப்ட்டாக இருக்கும் சிபிராஜ், இன்னொரு கெட்டப்பில் முகமூடி அணிந்து ஒருவரை கொலை செய்வது போன்று கொடூரமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவர் எதற்காக அந்த அவதாரம் எடுக்கிறார்? என்பது பற்றிய தகவல்களை தற்போதைக்கு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.