திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல்

karunanithy_001தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமையை அடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோபாலபுரத்தி;ல் உள்ள கருணாநிதியின் வீட்டின் மீது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் கல்லெறித்தாக்குதலை நடத்தினர்.

இதன்காரணமாக கருணாநிதியுடைய வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கின. இதன்போது திராவிட முன்னேற்றக்கழகத்தினருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் இடையில் மோதலும் இடம்பெற்றது.

இதில் திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து கருணாநிதியின் வீட்டுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டன.

இதன்போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பலத்த வாக்குவாதமும் ஏற்பட்டது.

TAGS: