சைட்(பகடி வதை) அடிச்சா கண்கள் பிடுங்கப்படும்: முதல்வர் அதிரடி

chandrasekara_rao_001ஈவ்டீசிங் செய்யும் ஆண்களின் கண்கள் பிடுங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டெல்லிக்கு அடுத்த படியாக ஹைதராபாத்தில் தான் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகமாக நடப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமத்து இளம்பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனை முற்றிலும் தடுக்கும் வகையில், ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு வளைகுடா நாடுகளில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

மேலும் பெண்களை போதை பொருளாக பார்ப்பவர்களின் கண்களை தோண்டி எடுக்கும் வகையிலும் சட்டம் உள்ளது. அது போன்ற சட்டங்களை இங்கும் கொண்டு வர வேண்டும் என பேசியுள்ளார்.

இதற்காக மகளிர் பொலிஸ் நிலையத்தை அதிகப்படுத்தவும், பெண் பொலிசாரை கூடுதலாக நியமிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூணம் மால கொண்டையா தலைமையில் ஒரு குழுவை தெலுங்கானா அரசு நியமித்துள்ளது.

இக்குழு குஜராத், கேரளா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியது மட்டுமின்றி அங்குள்ள சட்ட திட்டங்களை அறிந்து அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

TAGS: