தமிழின விரோதி சுப்பிரமணியன் சுவாமியின் வீடு முற்றுகைப் போராட்டத்தில் 300 பேர் கைது!

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினரால் இன்று மாலை பாராதீய ஜயதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் தமிழின விரோதியும், ராஜபக்சவின் ஆதரவாளருமான சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை நோக்கி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டபைபினரைச் சேர்ந்தவர்கள் சென்றபோது காவல்துறையினரால் வழி மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக் காரர்கள் கலங்கரை விளக்கம் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரால் சுப்பிரமணியன் சுவாமின் வீடு தடைகள் போடப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணியன் சாமிக்கு எதிரான கோசங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் கொழும்பாவியையும் எரித்துள்ளனர்.

























http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RPzzeEcdFMc

TAGS: