ஊழலில் திளைத்து தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் – தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு

modi_gandhi_001ஜம்மு காஷ்மீரில் 4 மற்றும் 5ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

கத்வாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி,

ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லாவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள். ஜனநாயகத்தில் வாரிசு அரயலுக்கு இடமில்லை. காஷ்மீரில் வளர்ச்சி திட்டங்களுக்கு இடமளிக்காமல், ஊழலில் திளைத்து தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.

யாருடைய மகனோ பதவிக்கு வரவேண்டும் என்பதைவிட, வாக்காளர்கள் தங்களின் மகன்களும், மகள்களும் முன்னேற வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

பாஜகவுக்கு பெரும்பாண்மை பலத்துடன் வாக்களித்தால், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவோம். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது என்றார்.

-http://www.nakkheeran.in
TAGS: