இயக்குநர் கே.பாலச்சந்தர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

k_balachander_001சென்னையில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் உடல்நலக் குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்க்குமிழி என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.பாலச்சந்தர், மேடை நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களை அறிமுகம் செய்த இவருக்கு, திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, 1987-ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும், 2010-ல் தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது உடல்நிலை சரியில்லாமல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாலச்சந்தரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், மருத்துவமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 84 வயதான இயக்குநர் பாலச்சந்தர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்களும் பிரபலங்களும் பதிவிட்டு வருகின்றனர்.

-http://www.newindianews.com