விமானத்தைக் கடத்தி ஜெயலலிதாவை விடுவிக்க திட்டமிட்டேன்: ஹூசைனி பரபரப்பு பேட்டி

husaini_001ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட ஹூசைனி, விமானத்தைக் கடத்தி ஜெயலலிதாவை விடுவிக்க திட்டம் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையாக வேண்டும் என்று தன்னை தானே சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே வீரர் ஹூசைனி வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், ஜெயலலிதாவை கைது செய்த போது நான் மதுரையில் இருந்தேன்.

இதற்குக் காரணமானவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்று வெறியோடு இருந்தேன்.

விமானத்தைக் கடத்தி அவரை விடுவிக்க வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தேன். ஆனால், என் மனைவி தான் என்னை மாற்றினாள்.

இல்லாவிட்டால் ஜெயலலிதாவின் இந்த நிலைமைக்குக் காரணமான கருணாநிதியையோ, சுப்பிரமணிய சுவாமியையோ ஏதாவது செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: