திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரளா ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பழுதடைந்து உள்ளதாகவும், இதன் காரணமாக அணை உடைந்தால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி அழியும் அபாயம் உள்ளது என்றும் கேரள மாநில அரசு கூறி வருகிறது.
இதனால் முல்லைப்பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்கக்கூடாது என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், 142 அடி உயரம் வரை அதில் தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அணை உறுதியாக இருப்பதால், அந்த பகுதியில் புதிய அணை கட்ட தேவையில்லை என்றும் கூறியது.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிய அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு துறையிடம் கேரளா அரசு அனுமதி கோரியது. இதையடுத்து அந்த பகுதியில் அணை கட்டுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை உத்தரவிட்டது.
அதன்பேரில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்காக முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 13 இடங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இந்த இடங்களில் ஆழ்துளைகள் அமைக்கப்பட்டு மண் பரிசோதனை செய்யப்படும். அத்துடன் புதிய அணை உருவாகும் நிலையில் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும். கேரளா நீர்ப்பாசனத்துறை நிர்வாக பொறியாளர் ஜார்ஜ் மேற்பார்வையில் இந்த ஆய்வுப்பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை வலிமையுடனும், பாதுகாப்பாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆனால் அந்த பகுதியில் புதிய அணை கட்டுவதற்கோ, அது தொடர்பான ஆய்வுகளை நடத்தவோ தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்கிறது கேரளா.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”. தமிழருக்கு மட்டும்தான்.
அரசியலில் இதெல்லாம் சகஜம் ஐயா..
யாதும் ஊரே யாவரும் கேளீர் (தமிழன் ) நாடே இல்லாதவன் கூறுகின்றான் .
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளா என்று ஒரு ஊரே கிடையாது ! அப்புறம் எங்கிருந்து வந்துச்சு இந்த மேடு பள்ளம் எல்லாம்? தமிழனுக்கு நாடு கிடையாதா! உன் பட்டன் முப்பட்டனை கேளு! தமிழன் போட்ட சோறு தின்னு உன் பரம்பரை வளர்ந்த லச்சனத்தை! சரித்திரம் தெரியாத தரித்திரமே!
நாடு இல்லாதே தமிழனே யாதும் ஊரே என்று கூற உனக்கு என்ன அருகதை இருக்கு.உன்னை தலையில் தட்டினால் யாரும் கேட்க நாதியில்லை.பல லட்ச விடுதலை புலிகள் இந்தியாவின் உதவியால் கொல்லப்படும் பொது யாரும் கேட்க வில்லை என்பது உங்களுக்கு தெரியாதா.உங்களால் ஒன்னும் பு….. முடியாது.உன் பக்கத்துக்கு மாநில மக்கள் எங்களுக்குத்தான் ஆதரவு என்பதை தமிழு மக்கல் முதல் தெரிஞ்சாகனும்.
திராவிட என்ற வார்த்தையை தமிழ் என்று பயன்படுத்த வேண்டும். தமிழர்கள் தான் திராவிடம் என்று பேசுகிறோம் –மற்ற திராவிடர்கள் அதை பற்றி பேசுவதே கிடையாது. இதனால்தான் திராவிடன் என்ற போர்வையில் மற்றவர்கள் தமிழ் நாட்டில் காலூன்ற முடிகிறது. மற்ற மாநிலங்களில் தமிழனை மிகவும் கீழத்தரமாக நடத்துகின்றனர். தமிழனுக்கு சூடு சொரணை ஒற்றுமை என்பதே கிடையாது– ஏன் இந்த இழிநிலை ?
“வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” என்பதை மெய்ப்பிக்கும்வகையில் “மலையாளி”யான MGR-ரை, தமிழக முதல்வராக தமிழ் நாட்டு மக்கள் ஏற்று கொண்டிருக்கும்போது, அவருடைய மாநிலத்தவர்களான கேரள அரசு “முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை” கட்டினால் தமிழ் நாட்டு மக்கள் ஏன் ஏற்று கொள்ள கூடாது ?
உலகே தமிழர்களுக்கு நண்பர்களின் ஊராக விளங்க எங்களுக்கு எதற்கு நாடு?. நாங்கள் எந்த நாட்டிற்குப் போனாலும் அங்கே உள்ள மக்களுடன் சேர்ந்து வாழக் கற்றுக் கொள்வோம். அங்கே உள்ளவர்கள் அனைவரும் எங்களின் நண்பர்கள். அவர்களுடைய நாடு எங்களின் நாடு. இன்று உலகமெல்லாம் தமிழர்கள் வாழுகின்றார்கள். இந்த பூவுலகமே எங்களின் நாடுதானே!. ஆனால் என்னவோ பாருங்கள் சமரசமாக வாழத்தெரியாத இந்த சிங்களவர்களுக்கு அந்த சிங்களத்தை விட்டால் இந்த உலகில் வேற எந்த நாடுமே இல்லையே?.
உலக நொல்லரசுகலான அமெரிக்க,ரஷ்ய,சீன,இஸ்ரேல், இந்தியா மொத்தம் 24 பேடி நாடுகள் சிங்களவனுடன் கூட்டு சேர்ந்து வீர தமிழனுடன் போர் நடத்தி ஈழ மண்ணை பிடிங்கியத்தை உலகமே அறியும்,இது எங்கள் சரித்திரம்!