தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு ஒரு போதும் செயல்படாது: பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது,

காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு ஒரு போதும் செயல்படாது. எனவே, 28 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டம் தேவையற்றது. மீத்தேன் எடுப்பதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நமது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது. தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழ் மீனவர் பிரச்சினை தொடர்பாக விரைவில் சுமூகமான தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: