ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு கப்பல்களை அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு

yemenஉள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ள ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு கப்பல்களை அனுப்ப உள்ளது.

ஏமனில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்யுள்ளனர். நாட்டில் பல்வேறு இடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட அவர்கள், தலைநகர் சனாவை கைப்பற்றியுள்ளனர். போர் பதற்றம் அதிகரிதுள்ளதையடுத்த அங்கு உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கப்பல்கள் ஏமன் அனுப்பப்பட்டுள்ளன. அந்நாட்டில் 3,500 பேர் வசிப்பதாகவும், அதில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் சனாவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப தேவையான உதவிகளை அங்குள்ள இந்திய தூதரகம் செய்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. வழக்கமான பயண ஆவணங்கள் கையில் இல்லாதவர்களும் நாட்டிற்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.nakkheeran.in

TAGS: