அல்கொய்தாவின் இந்திய பிரிவு தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலி

alqaeda_001அல்கொய்தா இயக்கத்தின் இந்திய கிளையின் துணை தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடுகளில் செயல்படும் தீவிரவாத அமைப்பான அல்கொய்தா இந்தியாவிலும் தனது இயக்கத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அல்–ஜவாஹிரி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார்.

ஏ.கியூ.ஐ.எஸ். என பெயரிடப்பட்டுள்ள இந்திய கிளைக்கு துணைத்தலைவராக அகமது பரூக் என்ற வளர்ந்து வரும் தீவிரவாத தலைவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

பாகிஸ்தானின் ஸ்வால் பள்ளத்தாக்கு பகுதிகளில், கடந்த சனவரி மாதம் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில் இந்திய கிளையின் துணைத்தலைவர் அகமது பரூக் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலி பணையக்கைதிகளும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவலை அல்கொய்தாவின் செய்தி தொடர்பாளர் ஒசாமா மேகமூத்தும் உறுதிப்படுத்தியாதாக தெரியவந்துள்ளது.

-http://www.newindianews.com

TAGS: