மலேசியாகினியின் இந்த விவாத மேடையை செம்பருத்தி ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வெள்ளிக்கிழமை, மே 8-ஆம் தேதி. மாலை 8 மணிக்கு மலேசியாகினி ஆய்வரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழில் நடைபெறும் இதில் தேசிய முன்னணியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக திகழும் பேராக் சட்டமன்ற சபநாயகர் டத்தோ எஸ். கே. தேவமணி, சனநாயக கட்சியின் கிள்ளான் நாடளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, நாடளுமன்றத்தில் சிறந்த விவாதங்களை முன்வைத்து மக்களின் பிரதிநிதியாக திகழும் மலேசிய சோசியலிஸ்ட் கட்சியை சார்ந்த மருத்துவர் ஜெயகுமார் தேவராஜ், ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஆலோசகர் நா. கணேசன் மற்றும் பிகேஆர் உதவித் தலைவரும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்நாட்டின் குடிமக்களாகிய இந்திய மலேசியர்களுக்கும், சீன மலேசியர்களுக்கும், மலாய் மலேசியர்களுக்கும், இதர மலேசியர்களுக்கும் சமமான உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. மலேசிய அரசமைப்புச் சட்டம் இதனை உறுதி செய்கிறது.
ஆனால், நடைமுறையில் உரிமைகள் இன அடிப்படையில் வேறுபடுத்தப்படுகின்றன. எல்லாம் மலாய்க்காரர்களுக்கே; மிஞ்சியதுதான் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும். ஏனென்றால், மலாய்க்காரர்கள் இந்நாட்டின் பூமிபுத்திரர்கள் அதாவது இளவரசர்கள், மற்றவர்கள் எல்லாம் வந்தேறிகள். இது அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடு அல்ல. இது மலாய், குறிப்பாக அம்னோ, அரசியல்வாதிகளின் நிலைப்பாடு.
இந்தியாவிலிருந்து பிரிட்டீஷ் நீராவிக் கப்பலில் ஏறி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் வாரிசு துன் டாக்டர் மகாதிர் முகமட், தமது உடம்பில் இந்திய இரத்தம் ஓடுவதில் பெருமைப்படுவதாக கூறிக்கொள்கிறார். இந்நாட்டின் மேம்பாட்டிற்கு இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது என்று கூறியுள்ள மகாதிர் முகமட். இந்நாட்டை மேம்படுத்திய இந்தியர்கள் மேம்பாடு அடைவதற்கு என்ன, எப்போது செய்தார்?
இந்திய சமூகத்திற்கு உரியதை முந்திய தலைவர்கள் செய்யத் தவறி விட்டதற்காக மன்னிப்பு கோரிய நஜிப் ரசாக், இந்தியர்களுக்கு வேண்டியதைச் செய்வதாக உறுதி கூறி இந்திய சமூகம் அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு “இஞ்சி சப்பாத்தி” போடுவதிலிருந்து அரிசி மற்றும் மேகி மீ பொட்டலங்கள் போன்றவற்றை விநியோகிப்பது, ஏகப்பட்ட இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு மானியங்கள் வழங்குவது போன்றவற்றை பெரும் ஆரவாரத்துடன் செய்து வந்தார்.
தாய்மொழிப்பள்ளிகள் (தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள்) அரசாங்க நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்பார்த்திருக்கக் கூடாது என்றும் அறிவித்தார். இறுதியில், இந்தியர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராட வேண்டும் (“Indians must fight for their rights”) என்றும் நஜிப் பாரிசான் பங்காளியான மஇகாவின் 66 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் முழங்கினார்.
இந்தியர்களுக்கு உரிமைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்காக அவர்கள் போராட வேண்டும். யாருக்கு, எந்த அரசாங்கத்திற்கு, எதிராக அவர்கள் போராட வேண்டும்?
இக்கேள்விகளுக்கு விடை காண மலேசியாகினி மேடையில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே அரசியல் கட்சி என்று கூறிக்கொள்ளும் மஇகாவின் தலைவர்களில் ஒருவரான எஸ். கே. தேவமணி, பிஎஸ்எம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு, ஹிண்ட்ராப் இயக்கத்தின் தேசிய ஆலோசகர் நா. கணேசன் மற்றும் பிகேஆரின் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் தமிழில் மே 8 இல் இரவு மணி 8.00 லிருந்து நடத்தவிருக்கும் விவாதத்தைதா காண வாருங்கள்.
இந்திய சமூகம் “மேம்பாடு” அடைந்தது எப்போது: மகாதிர் காலத்திலா அல்லது நஜிப் காலத்திலா? விவாதமேடை!
இந்தியர்களுக்கான மேம்பாடு கடந்த 35 ஆண்டுகளாக எப்படிப்பட்ட சூழலில் எந்த வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டது, அவை எப்படிப்பட்டவை? தேசிய மேம்பாட்டில் நாம் எங்கு உள்ளோம்?ஒதுக்கப்பட்டோமா அல்லது ஒதுங்கி விட்டோமா? மக்கள் கூட்டணியின் மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் கொள்கைகள் எப்படிப்பட்டவை? இது போன்ற வினாக்களுக்கு விடைதேடும் ஒரு களமாக இந்த விவாத மேடை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். இந்த விவாத மேடையின் நிகழ்ச்சி நேரடியாக கணினி வழி காண மலேசியாகினி ஏற்பாடும் செய்துள்ளது.
தொடர்பு: ஜீவி காத்தையா (017 889 8843)
நாள்: 8.5.2015 – வெள்ளிக்கிழமை ; நேரம்: மாலை 8.00 இடம்: Malaysiakini, 9 Jalan 51/205A, Off Jalan Tandang, PJ
இந்த நிகச்சிக்கு விளம்பர ஆதரவு தருபவர்கள் தினக்குரல் மற்றும் தமிழ் மலர் நாளிதழ்கள்.
என்னது…? இந்தியர்கள் மேம்பாடு அடைஞ்சிட்டாங்களா? சொல்லவே இல்லே..?
சபாஷ் நல்ல போட்டி.மகாதீர் காலத்தில் சாமிவேலு இந்தியர்களுக்கு மொட்டை அடித்தார் நஜிப் காலத்தில் GST போட்டு மலேசியர்கள் அனைவரையும் மொட்டை அடிக்கிறான்.
போங்கடா BN ………….அழிய நான் ஒவ்வொரு நாளும் பிராத்தித்துக் கொண்டிருக்கிறேன்
வணக்கம் …
சிறி முருகன் நிலையமா …..
இந்த விவாத மேடைக்கு
தேசிய முன்னணியின் …
பேராளர் !!!!!
சபாஸ் சரியான விவாத மேடை. திரளாக வருவோம். நமது விவாதத்தையும் கேள்வியையும் அங்கே வைப்போம்.
நல்ல விவாதம். பரவலாக பார்க்கும்பொழுது நாஜிப் காலத்தில் வாய்ப்புகள் சற்று அதிகரித்துள்ளது. ஆனால் அது இயல்பாக கிடைத்தது அல்ல. ஆனால் வணிகத்துறையில் இன்னும் கிடைக்கவேண்டியது ஏராளம் உள்ளது.
அந்த இரண்டு காலத்திலுமே இந்தியர்கள் மேம்பாடடையவில்லையே.இதென்ன தலைப்பு? புரியவில்லையே.மலேசியாவில் இன்னும் இந்தியர்கள் முன்னேறவில்லையே.அப்படியிருக்க ஏன் அந்த தலைப்பு?.” இந்தியர்கள் அதிகம் ‘மொட்டையடிக்கப்பட்டது’ மகாதீர் காலத்திலா? அல்லது நஜீப் காலத்திலா?” என்று கேள்வியை திருப்பி போடுங்கள் ஐயா.
ஒருவேளை MIC கூஜாக்கள் எதற்கு எடுத்தாலும் ஆம்மாம் சாமி போடாமல் இருந்தால் எதாவது நன்மை பிறக்கலாம் ஆனால் இந்த ஜென்மங்கள் பட்டம் பதவிக்கு பேயாய் அலைகிறார்களே
மகாதிர் ஆனாலும் சரி , நஜிப் ஆனாலும் சரி , மலேசிய தமிழர்களை பொறுத்தவரை இவர்கள் நமக்கு இரண்டாம் பட்ச தலைவர்களே ! தமிழர்கள் மேம்பாடு அடைந்தது சாமிவேலு காலத்திலா ,அல்லது பழனிவேலு காலத்திலா , என்று விவாதம் நடத்தினால் இன்னும் சூப்ப ராக இருக்கும் !! சரி போகட்டும் , கலந்து கொள்ள வரும் நாங்கள் வாத விவாதங்களை சமர்பிக்க அனுமதி உண்டா ???
பாழ்படுத்த பட்ட சமுதாயம்…………..
…………………………………………
புண்படும் தலைப்பு ………………………
1942 தொடங்கி 1945 வரையில் 415 கிலோமீட்டர் தூரம் காடுகளை அழித்து, ரயில் பாதைகளை அமைத்து பல துயரங்களுக்கு ஆளாகிய குடும்பங்களுக்கு,ஜப்பானிய அரசாங்கம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 20 ஆயிரத்து 700 கோடிவெள்ளி மலேசியாவிடம் வழங்கப்பட்டதாக ஜப்பானிய தூதரகம் வாயிலாக வெளியிடப்பட்டதாம் ! ………. இது போன்ற கேள்விகளுக்கு ?
ஐயா திருமூர்தியின் ! கருத்துதான் என் கருத்தும் கூட ! தமிழன் என்னமோ சாதனை செய்திட்ட மாதிரி அல்லவா இருக்கு ?
உண்மை யாக நேர்மையாக பேச வேண்டும் எதிபர்போம்
உண்மை யாக நேர்மையாக பேச வேண்டும்
என்னது…? இந்தியர்கள் மேம்பாடு அடைஞ்சிட்டாங்களா? சொல்லவே இல்லே..?
பத்து ஆண்டுகளை திட்டமிடாதவன் 50 ஆண்டுகளை இழப்பான்
என்கிறது ஒரு பழமொழி !
பழைய கதைகளை தொடர் பட்டியலிடும் இந்த விவாத மெடையால் இந்தியர்களுக்கு குறிப்பா 85 % இந்திய தமிழர்களுக்கு என்ன நன்மை ? பாடம் நடத்தி சோகங்களை பகிர்வதால் யாருக்கு என்ன பயன் ?
10 வருசமா பேசுகிற பழைய கதைகளை பேசி மீதமிச்சமுள்ள அரசியல் தலைவர்களின் தரத்தை இடைபோடவா? இந்த மெடையால் நங்கள் பெறப்போகும் மாற்று வழி அல்லது பொருளாதார அறிவுதான் என்ன?
அல்லது மகாதீர் /நஜிப் இனிமேல் திருந்தவேண்டும் என்ற தனலா ?
அல்லது இந்த மோதல் அடுத்த தேர்தல் வேட்பாளர்கள் தரவுக்கு வாய் சவாடல் மேடையா?
ஏன் இதில் சிலாங்கூர் மாநில இந்தியர் எக்ஸ்கோ சேர்க்கப்படவில்லை ? இது மாநில சிக்கலா? மதிய அரசின்
கோமடியை சீரியல் போட்டு பேச நமக்கு அந்த நடுவண் அரசு ஆளுமை இல்லையே, ஒத்த காசுக்கு ஒப்புமா?
சிலாங்கூரில் பரிவு மிக்க எக்ஸ்கோவுக்கு 4 மில்லியன் தான் இந்த ஆண்டு பஜெட். அதுவும் கோவில் குலத்துக்கு என்றால் இந்த சமுதாயம் சமயத்தில் மட்டும்தானா பரிதாபமாக உள்ளது?
அப்போதும் இப்போதும் அரசியல் இன மமதைகளிடம் முதல்வனிடம் பேச முடியவில்லை என்ற குழந்தை தன கூத்து இந்த மேடைவழி தீருமா?
10 ஆண்டுகள் ஆகியும் இந்தியர்களுக்கு “ஒரு ப்ளூ பிரிண்ட்” தயார் செய்ய முடியாத இவர்கள் ஏன் முடித்த /முடிந்த கதையை சுரண்ட வேண்டும் ?
சிலாங்கூர் மாநிலதில் தோட்டங்கள் தோறும் BEKAS koperasI அமைத்து நிதி /நில வங்கிகளை land banK அமைக்க இவர்களுக்கு சிந்தனை இல்லையா?
முன்னாள் சிலாங்கூர் மாநில மந்தெரி பேசார் அறிவித்த இந்தியர்களுக்கான ஆஸ்ரம பள்ளி திட்டம் என்னவானது.
நல்ல தீர்வை காண சிலாங்கூர் மாநில மந்தெரி பெசாரை அழைத்து இருக்க்லால்ம். அல்லது மாநில பொருளாதார ஆலோசகர் இயக்கம் ஒன்று உள்ளது அழைத்து இருக்கலாம். யோசிப்போமாக ! ஆனால் வருவோம் , ஏற்பாட்டுக்குழுவுக்கு நன்றி.
தமிழர் குரல் சிலாங்கூர்
என்ன இப்படி கேட்டு புட்டைஹா? காக்கா கலாத்திலே நம் உரிமையை எல்லாம் ஏப்பம் விட்டதும் இல்லாம கோடி கணக்கா ஊரே அடிச்சி ஒலையிலெ போட்டுகிட்டது உங்களுக்கு தெரியாதாக்கும்! ஏதோ நஜிப்பாவது பெரிய மனசு பட்டு நமக்கு அப்ப அப்ப கொஞ்சம் செலவுக்கு பணம் கொடுத்தாரு! இவரு முடிக்க வேண்டிய வேலை இன்னும் ஒன்னு இருக்கு! அதனாலே இப்போதைக்கு இது போதும்!
இந்தியர் கலால்,நிறைய நன்மையடை தது,மகாதிர அல்லது நஜிப அல்லது மொட்டை சாமீ வேலு வ ,தலைப்பு இப்படி இருந்தால் நல்ல இரு குமே !!!!இந்தியர் கல் முனேற்றம் அது அவர்களுடய கடுமை யான உழைப்பே காரணம், இதில் அரசியல் வாதிகள் குளிர் காய வேண்டாம் .
எந்த அரசியல் தலைவர் காலத்திலும் இந்தியர்கள் முன்னேறவில்லை. இந்தியர்களுக்கு தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அவர்கள் தான் முன்னேறினர். அதனால் விவாத மேடையின் தலைப்பை மாற்றுங்கள். ‘இந்தியர்கள் முன்னேறியது அவர்தம் முயற்சியிலா அல்லது தே.மு. அரசாங்கப் பிச்சையிலா’.
மா. ஈ. கா. தலைகள் மட்டுமே மேம்பாடு கண்டுள்ளன ///? இதற்கு ஏன் விவாத மேடை ? குட்டிக்கரணம் போட்டு வந்தவர்கள் சிலர் . காலத்தின் ஓடையில் , அடித்து வந்தவர்கள் சிலர் . இதற்கு ஏன் வெட்டி விவாத மேடை . போய் வேலைய பாருங்கப்பா?
எல்லாருக்கும் ஒருமித்த கருத்து ஆனாலும் MIC காரன்களுக்கு நாமெல்லாம் ஆகாயத்தில் பறக்கிறோம்
காக்காமகாதீர் அரசுதுறை;மற்றும் இந்திய மாணவர்களின்கல்வியிலும் இனதுவேசமாக பழிவாங்கினார். நஜிப்பு காலத்திலாவது spm. தேர்வில குறைவானமார்க்கு எடுத்தாலும் ஆண்டுக்கு1500.மேட்டிரிகுளேன்தருவது பாரட்டத்தக்கதே.ஆனாலும் gst.விதித்தது மக்களின் வயிறு பற்றி எரியுது அய்யா பற்றி.எரியுது!.
அடே எங்கப்பா ,,! யாருயா அங்க ஜோக்கு அடிக்கிறது ? மகாதீர் காலத்தில் கவன்டமணி , நசிப்பு காலத்தில் வடிவேலு ,இருவரும் புதிதாக ஏதும் படத்தில் நடிதிரிக்கிரார்களா BRO
மகாதீர் காலத்தில் இந்திய சமுதாயத்தின் பெயரைச் சொல்லி சாமிவேலு ஒரே ஆளு ஏச்சிப் பொலப்பு நடத்தியது ஒருபுறம் இருக்க நஜிப் காலத்தில் புதிய பல தலைவனெல்லாம் கிளம்பி சமுதாயத்தை உயர்த்தி நிமிர்த்தப் போகிறேன் என்று சொல்லி பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆக இந்திய சமுதாய சார்பாக ஒரே தலைவர் வளர்ந்தாறு …! இப்ப பல தலைவர்கள் வாழ்கிறார்கள்…?
தலைப்பே சரியில்லை. ‘இந்தியர்கள் அதிகமாக துண்டாடப்பட்டதும், பந்தாடப்பட்டதும். மகாதிமிர் காலத்திலா, அல்லது நஜிப் காலத்திலா?’ என்றிருக்க வேண்டும். பொருத்தமில்லாத தலைப்பே இன்னும் நம்மை பின்னோக்கி விரட்டுகிறது.
மலாய்க்காரர்கள் மேம்பாடு அடைந்தது மகாதீரர் காலத்திலா அல்லது மிஸ்டர் நம்பிக்கை காலத்திலா என்பதே சரியான தலைப்பு என்பது என் கருத்து. மேலும் இந்தியர்கள் மேன்மை அடைந்து விட்டார்களா?அருமையான காமடி ஐயா.
என்னது முகமது குட்டி காக்கா டமிலர்கள்ளுக் துரோகம் செய்து விட்டாரா
அந்த இரண்டு காலத்திலுமே இந்தியர்கள் மேம்பாடடையவில்லையே.இதென்ன தலைப்பு? புரியவில்லையே.மலேசியாவில் இன்னும் இந்தியர்கள் முன்னேறவில்லையே.அப்படியிருக்க ஏன் அந்த தலைப்பு?.” இந்தியர்கள் அதிகம் ‘மொட்டையடிக்கப்பட்டது’ மகாதீர் காலத்திலா? அல்லது நஜீப் காலத்திலா?” என்று கேள்வியை திருப்பி போடுங்கள் ஐயா.
இது போன்ற விவாதங்களை வரவேற்க தக்கது ……. செம்பருதிக்கி எண்களின் நன்றி ………….
இந்த தலைபே சரியில்லை , இந்தியர்கள் மேம்பாடு கண்டது பிரிட்டன் காலத்திலா சுட4திரம் அடைந்த பின்னரா என்று இருக்க vENdum
எவன் காலத்திலும் முன்னேறவில்லை என்பதே யதார்தம். ஏழை தமிழர்களை முன்னிறுத்தி சில டத்தோக்களும் ஓரிரு கோடிஸ்வரர்களும் ஏனையோர் சமுதாயத்தின் விளிம்பு நிலையிலும் இருக்கின்றனர். ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் நம்மை மதிபதில்லை. அவரவர் கரங்களைக் கொண்டே கரணமிட்டு முன்னேர முயலுவோம். இந்த விவாதம் அரசியல் அரங்கை சூடெற்றத்தான் உதவும். பிரதமர்கள் மலாய்காரர்களை தூக்கிவிட உள்ள பதவி. இன்னுமா இந்த சமுதாயம் நம்புகிறது.
தலைப்பு ! கன்றாவியாக வைப்பதே செம்பருத்திக்கு வழக்கமாகி விட்டது !
நல்ல தலைப்பு.நன்றி ஜி.வி காத்தையா மற்றும் செம்பருதி குழு வினருக்கும்.யாருமே இந்தியனை உயர்த்தவில்லை.சாய்ததுதான் மிச்சம்.இங்கே பேசுபவர்கள் உண்மையை பேச வேண்டும்.சுங்கை சிப்புட் டாக்டர் ஜெயக்குமார் நடுநிலை,சேவியர்,சார்லஸ் பரவாஇல்லை ஜெயமணி ???
தலைப்பு கோளாறாகத்தான் இருக்கிறது ! எதற்கும் போய் பார்ப்போமே !!
மகாதீர் காலத்தில் துண்டாடப் பட்டத் தோட்டத்தில் இருந்து நகரத்திற்கு புலம் பெயர்ந்த இந்தியர்கள் புறம்போக்கு குடிசை வாசிகளாக மேம்பாடு அடைந்தார்கள். புறம்போக்கு குடிசை வாசிகளானா இந்தியர்கள் GST நாயகனின் காலத்தில் நகர்புற ஏழைகளாக மேம்பாடு அடைந்துள்ளனர். ஆக மொத்தத்தில் எங்கு ஆரம்பித்தாமோ அங்கேதான் உள்ளோம். இதையும் விவாத மேடையில் கொஞ்சம் எடுத்துப் பேசுங்கோ.
நந்தலாலா மற்றும் தேனீ அவர்கள் கூறுவதுதான் முற்றிலும் உண்மை…நன்றி…
விவாதமேடைக்கு நன்றி. ஒரு சிறிய யோசனை. விவாதமேடையில் கலந்து கொள்ளாத முடியாதவர்கள் அநேகர். அதனால் இங்கு செமபருத்திலேயே ஒரு விவாதமேடையை ஆரம்பித்தால் நாங்களும் எங்களின் கருத்துக்களை அளிக்க முடியும். இதோ இங்கு வெறும் அறிவிப்புக்கே இவ்வளவு கருத்துக்கள் என்றால் …..விவாதமேடை எப்படி இருக்கும்…! எங்களின் கருத்துக்களையும் சொல்ல அனுமதியுங்கள்.
இந்தியர்கள் அதிகம் நசுக்கப்பட்டது மகாதீர் காலத்திலா கூட்டுமாரில் இரு$து வாக்குகளூகு கொடுக்கப்பட்டது நஜிப் காலத்திலா .
ஒரே காமிடியப்பா காமிடி! “வாழ வழியில்லாமல் செய்வதில் அவர் நல்லவனா , இவர் நல்லவனா” என்று தலைப்பு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் !
தமிழ் ஆர்வம் மிகுதியாய் கொண்டோர்க்கு வணக்கம்.
நாலு வரியிலே நானும் கருத்து சொல்லனும்னு தானுங்க ஆரம்பிச்சேன்..அது நாலு பக்கமா ஆயிடிச்சுங்க… ஆசிரியர் ஐயா மனசு வச்சா முழுசையும் பிரசுரம் பண்ணலாமுங்க… முழுசா பிரசுரமானா… வாசகர் ஐயாவுங்க கொஞ்சம் பொறுமையா படிங்க…உங்களுக்கு புடிக்கும்னு நெனைகுறேனுங்க…
எவனோ ஒருவன் இல்லாத ஊருக்கு வழி கேட்டானாம்..….ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ….
இரண்டு பிரதமர்களுமே ( ஏன் இனி வரும் பிரதமர்களும் கூட … அவர் எந்த அரசியல் கூட்டணியை சார்ந்தவராக இருந்தாலும் சரி ) நாம் எதிர்பார்ப்பதை போல் நம் சமுதாயத்திற்கு ஒன்றையும் சாதித்து விட வில்லை , சாதிக்கப் போவதும் இல்லை .
அரசியல் தலைவர்களின் விசுவாசிகள் (சமுதாய விசுவாசிகள் அல்ல ) என்னுடைய இக்கருத்தை ஏற்க்க போவதில்லை. அதை பற்றி நான் எழுதி பயன் ஒன்றும் காணப் போவதுமில்லை.
நான் வேறு ஒரு காரணத்திற்காக இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.
உத்தமமான எத்தனையோ காரியங்களுக்கு இந்த அரசியல்வாதிகள் இப்படி ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருந்தால் இந்த வேடிக்கையான விவாத மேடையை நடத்த வேண்டிய நிலை செம்பருத்திக்கு வந்திருக்காது. எப்படியோ இப்போது ஒன்று கூடுகிறீர்கள்.
இந்த கூட்டத்தின் முடிவில் உருப்படியான ஒரு தீர்மானத்தை கொண்டுவர மாட்டீர்களா என்று எனக்குள் ஒரு நப்பாசை .
அதாவது அரசியல்வாதிகளே…….,அடுத்த ஆண்டு முதல் STPM மாணவர் சேர்க்கையில் SPM தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய புள்ளிகளை கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்ளதாம்.
அரசியல் வாதிகளாகிய நீங்கள்தான் தமிழுக்காக எதையும் இழக்க துணிந்தவர்கள் ஆயிற்றே . அந்த வகையில் மலேசியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி இந்திய வம்சாவளி ( வேண்டுமென்றால் மறத்தமிழர்கள் என்றே வைத்துக் கொள்வோமே )தலைவர்கள்,துணைத் தலைவர்கள்,மற்றும் நாடாளுமன்ற , சட்டமன்ற , செனட்டர்கள் ஆகியோர் மட்டும் ( மற்ற பதவி வகிப்போரோ அல்லது தொண்டர் சிகாமணிகளோ இதில் கலந்து கொள்ள கூடாது)அரசின் இந்த முடிவிற்கு எதிராக SPM தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய புள்ளிகளை STPM சேர்க்கையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் அறிக்கையை நீங்கள் அனைவரும் ஒருபட தயாரித்து , அதனை செய்தி தாள் மூலமாக பிரசுரித்து பின்னர் ஒரு வேலை நாளை தேர்ந்தெடுத்து ,புத்திராஜாயவிற்க்கு சென்று, கல்வி அமைச்சு அலுவலகம் முகப்பில், வெயிலிலோ அல்லது மழையிலோ குறைந்தது ஒரு மணி நேரம் ஓயாமில் கோழமிட்டு , உங்கள் கோரிக்கையை கல்வி அமைச்சரை வெளியே அழைத்து ( நீங்கள் அலுவலகத்தின் உள்ளே செல்லகூடாது ) அவரின் கையில் ( அவர் அனுப்பும் ஏவலாலிகளிடம் அல்ல ) கொடுத்து வலியுறுத்த வேண்டும். அப்படி கல்வி அமைச்சர் வெளியே வந்து பெற்றுக்கொள்ளா விட்டால் அதற்கடுத்த வாரம் இதே நிகழ்வை மீண்டும் செய்ய வேண்டும் . கல்வி அமைச்சர் வெளியே வந்து உங்கள் அறிக்கையை பெற்றுக்கொள்ளும் வரை ஒவ்வொரு வாரமும் இது தொடர வேண்டும்.
இதற்கிடையில் கல்வி அமைச்சில் இருந்து SPM தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய புள்ளிகள் STPM மாணவர் சேர்க்கையில் ஏற்றுக்கொள்ளப் படும் என்ற செய்தி வெளியாகலாம். அதனை சாக்காக கொண்டு நீங்கள் பின்வாங்கக் கூடாது. உங்கள் போராட்டம் கல்வி அமைச்சர் புத்திரா ஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியே வந்து பெற்றுக்கொள்ளும் வரை தொடர வேண்டும்.
அது மட்டுமல்ல உங்களில் யாரும் எந்த செய்தி ஊடகங்களுக்கும் பேட்டி தரக் கூடாது. உங்கள் கருத்தை ஒரு நடு நிலையாளரை பேச்சாளராக (spokesperson ) நியமித்து அவரின் மூலமாக மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். (நான் ஐயா ஜீவி காத்தையா அவர்களை இந்நோக்கத்திற்கு முன்மொழிகிறேன்). விளம்பரத்துக்காக நாடகமாடுகிறீர்கள் என்ற அவப் பெயர் உங்களுக்கு வந்து விடக் கூடாது பாருங்கள், அதற்க்க்காகத்தான் இந்த யோசனை.
மேலும் இந்த மொழி போராட்டத்தின் போது நீங்கள் சார்ந்திருக்கும் எந்த அரசியல் கட்சியின் சின்னமோ, கொடியோ, சீருடையோ, குடையோ , எதையும் பயன் படுத்தக்கூடாது. அனைவரும் வெள்ளை நிற பருத்தி சட்டை மட்டுமே அணிய வேண்டும் , பருத்தி வேட்டி கட்டினால் இன்னும் சிறப்பு.
ஒரு வேலை நீங்கள் கைது செய்யப்பட்டால் ஜாமீன் பெற்றுக்கொண்டு வெளியே வரக்கூடாது. ஜாமீன் தொகையை கட்டாமல் சிறை செல்ல வேண்டும். ஜாமீன் கட்ட தேவை இல்லை என்று விடுவிக்கப்பட்டால் மறுபடியும் போராட்டத்தில் இனைய வேண்டும். அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகச்சை பெற வேண்டும்.அனுமதிக்கப் பட வேண்டும். நீங்கள் சிறையிலோ அல்லது மருத்துவமனையிலோ தங்க நேரிட்டால் உங்கள் கட்சியின் அடுத்த உயர் மட்டத்தில் உள்ள ஒருவரை உங்கள் பேச்சாளர் மூலம் போராட்டத்திற்கு முன்னிறுத்த வேண்டும்.
எக்காரணத்தை முன்னிறுத்தியும் பொது மக்களையோ , கட்சி உறுப்பினர்களையோ , தொண்டர்களையோ உங்கள் போராட்டத்திற்கு அழைத்து இணைத்துக்கொள்ளக் கூடாது ( பாவம் அவர்கள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் , எத்தனை காலம்தான் அவர்கள் முதுகில் சவாரி செய்து கொண்டிருப்பீர்கள்?) அவர்கள் வேண்டுமென்றால் நூறு மீட்டார் தூரத்திற்கு அப்பால் நின்று வேடிக்கை பார்க்கட்டும். உயிரையும் கொடுப்பேன் மயிரையும் கொடுப்பேன் என்று மேடைகளில் நீங்கள் முழங்கி கிழித்ததும் , பத்திரிக்கை அறிக்கை விட்டதும் போதும். உங்கள் உயிரையோ, மயிரையோ நீங்கள் இழக்க வேண்டாம். போராட்டம் என்றால் என்ன , எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு பாடமாக இந்த சமுதாயத்திற்கு கற்று கொடுப்பதாக வைத்துக் கொள்ளுங்களேன்.
அப்புறம் இன்னொரு விஷயம் , நான் இந்திய சமூகத்திற்காக அல்லது தமிழர்களுக்காக மட்டும் என் நேரத்தையும் , கவனத்தையும் ஒதுக்க முடியாது என்று எந்த $%^&*&^ யாவது வாய் திறந்தால் இனி வரும் காலங்களில் இந்திய சமூகத்திற்காக புடுங்க போகிறேன் என்று வாய் திறப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். நான் சொல்வது இந்திய சமூகத்திற்கான , தமிழ் இனத்துக்கான போராட்டம் . அது நினைவில் இருக்கட்டும்.
இப்படி எல்லா முக்கியமான பிரச்சனைகளுக்கும் போராடி பாருங்கள் , வெற்றி நம் சமுதாயதிற்கு குவியும். உங்களை கொண்டாடுவார்கள் என் இன தன்மான சிங்கங்கள். இதுதாங்க என்னுடைய நப்பாசை. விவாத மேடையிலே பேச வேண்டியதை எல்லாம் பேசி முடிச்சுட்டு , கடைசியிலே இந்த அப்பாவி சமுதாயத்திற்காக யாரவது இந்த யோசனையை முன்னிறுத்தி , வழிமொழிந்து அந்த அரசியல்வாதிகளை இச்சவாலை ஏற்க்க சொல்லுங்கள். அவர்கள் சம்மதிப்பார்கள் என்று எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அதுதான் சொன்னேனே நப்பாசை என்று. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் …வழக்கம் போல் இவர்கள் பேசுவதை கேட்டு , சிங்கமாய் சீறி, சீனன் கோப்பிக் கடையிலே நீங்கள் ஒரு பட்டிமன்றம் நடத்துங்கள்… நெஞ்சு பொறுக்குதில்லையே…பராசக்தி..நெஞ்சு பொறுக்குதில்லையே ….அட போங்கையா ……
அடுத்த ஆண்டு முதல் SPM தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கிய பாட புள்ளிகள் STPM மாணவர் சேர்க்கையில் ஏற்றுக்கொள்ளப் படாது என்ற நப்பாசையின் செய்தியை அரசாங்கத் தகவலாலர்களிடம் உறுதி செய்துக் கொண்டு கருத்து எழுதுவோம்.
நப்பாசையின் கதை இப்படி இருக்க, அடுத்த ஆண்டு தமிழ் இலக்கியம் பாடத்திற்கு புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட 3 இலக்கிய பாட புத்தகங்கள் இன்னும் 4-ம் படிவ மாணவர்களுக்கு இது வரையில் கிடைக்கவே இல்லை. இவ்வருடத்தில் 4 மாதங்கள் கழிந்து விட்டன!. அப்புறம் ஆசிரியர்கள் எவ்வாறு நமது மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் போதிக்க முடியும்?. புதிய இலக்கிய புத்தங்கங்களை அறிமுகப் படுத்த ஆவன செய்த அறிவாளிகளுக்கு முதலில் அந்த புத்தங்கங்களை தயார் படுத்திக் கொண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற முன்னறிவும் நுண்ணறிவும் கொஞ்சம் கூடவா இல்லை?. கடந்த முறை புதிய புத்தகங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட போதும் இதே கதைதான். டத்தோ தஸ்லிம் அவர்கள் அதனை கண்டித்து ஓர் அறிக்கை விட்ட பிறகுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று புத்தகத்தை விநியோகம் செய்தனர் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள். மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றதா அல்லது மாணியம் கிடைக்கவில்லை என்று மாணவர்களை பந்தாடிக் கொண்டிருக்கின்றீர்களா?.
விவாத மேடையில் பேச இருப்பவர்களே இதையும் கொஞ்சம் எடுத்துப் பேசுங்கள். இந்தியர்களுக்கு நாங்களே ஈடு இணை அற்ற பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டு இன்றும் வாழவெட்டியாக வாழும் ம.இ.க., இரண்டுப் பட்டதால் யார் இதற்கு அரசாங்க மானியத்தைப் பெற்றுக் கொடுப்பது என்ற போராட்டமா அல்லது இதற்காக மானியத்தை வாங்கிக் கொண்ட தமிழ் மொழி மேம்பாட்டுக் குழு என்று தங்களை சொல்லிக் கொள்வோர் இன்னும் குறட்டை ஒலியுடன் தூங்கிக் கொடிருக்கின்றனரா?. இளந்தமிழன் மேற்கூறிய இரண்டு பிரச்சனைகளுக்கும் பதில் அளிப்பாரா?.
மீண்டும் டத்தோ தஸ்லிம் அவர்களை நாடி தகுந்த வெடி வேட்டு வையுங்கள் என்று கேட்கும் நிலைதான் நமக்கு வரும் போல் இருக்கு!. தன்னைத் தமிழ் காவலன் என்று சொல்லிக் கொண்ட அரசியல்வாதிகள் எல்லாம் சந்து பொந்துக்குள் நுழைந்துக் கொண்டிருப்பான் போலிருக்கு. எங்கே அந்த பாழாப்போன வேலு, பரிதவிக்கும் சப்ரமனியம், சரவணமுகமான அரசியல் தலைவர்கள் எல்லாம்?. இந்தியர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டார்களா என்று மட்டும் பேசாமல் இந்நாட்டு இந்தியர்களில் 80% தமிழர்களாக இருப்பவர்களின் தமிழ் மொழி அந்த இரு அரசியல் தலைவர்களின் காலத்தில் அதற்குரிய அங்கீகாரம் கொடுத்து மேம்படுத்தப் பட்டதா என்றும் பேசுங்கள். வெறும் தமிழ் பள்ளி கட்டிடத்தை மேம்படுத்தியதைப் பற்றி அல்லாமால் தமிழுக்குரிய அங்கிகாராம் இந்நாட்டு பல்கலைக்கழகம் வரை மேம்படுத்தப் பட்டுள்ளதா என்று பேச்சாளர் டத்தோ தேவமணியிடமும் கேளுங்கள். அவர் தமிழ் மொழி படித்தவர் இல்லை. அதனால் தமிழ் காவலர் என்று வெளியில் சொல்லிக் கொண்டு உள்ளே தமிழ் வாழ்ந்தால் என்ன போனா என்ன எனக்கு பதவி கிடைத்தால் போதும் என்று வாழாவெட்டி அரசியல்வாதியாக இருந்து விடப் போகின்றார்!.
தேனீ வணக்கம்….இந்த கடிதத்தின் மூலமே எனக்கு விவரம் தெரிய வந்தது… http://www.malaysiakini.com/letters/297268 . அப்புறம் இன்னொரு வேண்டுகோள் …சீன சமூகமும் பாதிக்கப்பட்டுல்ளத்தால் அவர்களையும் சேர்த்து கொள்கிறோம் போராட்டத்தில் என்றெல்லாம் திருவாளர் அரசியல்வாதிகள் சொல்லக்கூடாது… இது தொண்டர்களின் போராட்டம் இல்லை.. முழுக்க முழுக்க தலைவர்களின் போராட்டமாக இருக்க வேண்டும்… மேலும் தேனீ , நீங்கள் கூறிய படிவம் 4 இலக்கிய விவகாரம் மேலுமொரு உண்மையான அவலம்தான்.. இப்படி இன்னும் எத்தனையோ…ஏதாவது ஒரு பிரச்சனைக்கு இந்த தலைவர்கள் நான் சொன்ன விதத்தில் போராட்டம் நடத்தி துவங்கட்டுமே…என்ற நப்பாசைதான் எனக்குள்.
நன்றி நப்பாசை அவர்களே. இப்படி நடக்கவிருக்கின்றது என்பதை மாணவர்கள் தெரியப் படுத்துகின்றார்கள். இடைநிலைப் பள்ளியில் போதிக்கும் தமிழ் ஆசிரியர்கள் எதைப் புடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. இது அவர்கள் வாழ்வாதாரப் பிரச்சனை அல்லவா?. மேலும் தமிழ் மொழி படித்து தமிழ் ஆசிரியர்களாக எதிர்காலத்தில் வேலை தேடும் தமிழருக்கும் அல்லவா நீங்கள் அநீதி இழைக்கின்றீர்கள். உங்கள் வயிறு இப்பொழுது நிறைந்தால் மட்டும் போதும். எதிர்கால தமிழன் இந்நாட்டில் எப்படி போனால் என்ன என நினைத்துக் கொண்டு செயல்படும் பல இடைநிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர்களை நினைத்தால் வயிறு எரிகின்றது. தமிழ் ஆர்வலர்களே, இதனை கருத்தில் எடுத்துக் கொண்டு கமலத்திற்கு நாதனாக விளங்கும் சக்தி இழந்த அறிவாளியைத்தான் கூப்பிட்டு கேட்க வேண்டும். பொறுத்திருங்கள் ஓரிரு நாட்களில் இதற்கு விடை கிடைக்கின்றதா என்று பார்ப்போம். இல்லையேல் இதற்காக இன்னொரு ஹின்றாப்ட் போராட்டம் நடத்த வேண்டி வந்தாலும் வரும். நப்பாசை சொன்னதுபோல் எந்த மேல்நிலை அரசியல்வாதிகளும் செய்யப் போவதில்லை. நீங்கள் முன்னே செல்லுங்கள் நாங்கள் பின்னே இருந்து உங்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்வார்களே ஒழிய எவனும் முன்னுக்கு நின்று கொடி பிடித்து நிற்க மாட்டான். வேண்டுமானால் தமிழுக்கு கோடி போடுவான்.
நப்பாசை அவர்களே, இந்த SPM தமிழ் மொழி, தமிழ் இலக்கிய பாடங்களின் தேர்ச்சி மேல்நிலை படிப்புக்கு ‘மெரிட்’ முறையில் ஏற்றுக் கொள்ளப்படுவது ஆண்டாண்டு பிச்சை போடுங்கள் ஐயா, பிச்சை போடுங்கள் ஐயா என்று கல்வி அமைச்சை உருவி வேண்டும் நிகழ்வென அறிகின்றேன். இது வரையில் இப்பிரச்சனைக்கு கல்வி அமைச்சில் இருந்து நீண்ட காலத்திற்கு முடிவான முடிவு ஏதும் கிடைக்கவில்லாம். அதனால் தான் என்னவோ மேல்நிலைக் கல்விக் கழகங்களில் தமிழ், சீன மொழி மற்றும் இலக்கிய பாடங்களின் தேர்ச்சி, கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விட்டனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பிரச்சனை என்று வரும்பொழுது மட்டும் நமது அரசியல்வாதிகள் இதை புடுங்கி மேலும் அதைப் புடுங்கப் போறேன் என்று சொல்லி நம்மை ஏமாறிக் கொண்டிருக்கின்றார்களே தவிர உண்மையாக நிரந்திர தீர்வு கண்டதாகத் தெரியவில்லை. இன்னும் சில ஆண்டுகள் கழித்து வேறொரு கல்வி அமைச்சர் வந்தால் இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று கையை விரிக்கப் போகின்றான்.
திரு நப்பாசை,script ரொம்ப நல்லாருக்கு! ஆமா இது எந்த படத்துலே வர்றே காட்சி?
ஐயய்யோ குச்சி… நான் தமிழ் பட கூத்தாடிகளை முன்னிறுத்தி வாழ்பவனல்ல…. பாவம் நீங்கள் தமிழ் பட கூத்தாடிகளை, எல்லாம் தெரிந்த மேதைகள் என்று தூக்கி வைத்து ஆடும் செம்மறிக் கூட்ட தொடர்பை அதிகம் கொண்டவர் போலும் … அந்த கூத்தாடிகளின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்…
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் …… நமக்கு ஒரு கவலை இல்லை.எந்த நாயும் வந்து வாயுல வூட்டாது.நாம ஓலைச்சாதான் நமக்கு சாப்பாடு………………..அத முதல்ல தெரிஞ்சிக்கனும்.
ஐயா நப்பாசை,ஒரு காமெடி பிரேக் இருக்கட்டும்னு அந்த வரி,அதுக்கே இந்த அடி! dank you! தங்கள் வரிகள் தங்களை அடையாளம் காட்டி விட்டது,முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
ஹிண்ட்ராப் என்று சொல்லும் கணேசன் நீங்கள் வேதா அல்லது உதயா பக்கம் ?
தலைப்பே தப்பா இருக்கே?