தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: திருமாவளவன்

Thirumaசென்னை: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாகவும் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

சென்னை மடிப்பாகத்தில் இன்று எனது நேர்முக உதவியாளர் வெற்றி செல்வன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை கொலை செய்தவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வன்முறை அதிகரித்து உள்ளது. ஒரு கட்சி தலைவராக நான் இருக்கிறேன். எனக்கே பாதுகாப்பு இல்லை, மற்ற தலைவர்களுக்கும் இதே நிலைதான்.

தமிகத்தில் உள்ள தலித் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

tamil.oneindia.com

TAGS: