காவிரியில் கழிவுநீர்: ஜூலை 28–ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க கர்நாடகாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

kaveriசென்னை, மே.26–

தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வக்கீல் சுதன் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் காவிரியில் கழிவுநீர் கலப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட பசுமை தீர்ப்பாயம் காவிரியில் கழிவுநீர் கலப்பது குறித்து ஜூலை 28–ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி கர்நாடகாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதேபோல தமிழக தலைமை செயலாளர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சொக்கலிங்கம் உத்தர விட்டார்.

-http://www.maalaimalar.com

TAGS: