சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு அண்மையில் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இருப்பினும் எந்த தேதியில் மேல்முறையீடு செய்வது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இந்த முடிவு ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேன்முறையீடு: உச்ச நீதிமன்றம் தடை விதித்தால் ஜெயலலிதாவுக்கு சிக்கல்?
ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால், அவர் வகித்து வரும் முதல்வர் பதவிக்கு பாதிப்பு ஏற்படும் என்று வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேன்முறையீடு செய்வது என்று கர்நாடக அமைச்சரவை இன்று முடிவு செய்தது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இவ்வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா அளித்துள்ள பேட்டியில், சொத்துக் குவிப்பு வழக்கின் மேன்முறையீட்டின் போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோர முடியும் என கூறியுள்ளார்.
அவ்வாறு உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்து வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால், ஜெயலலிதா மீண்டும் பதவி இழக்கும் நிலை ஏற்படும் என்றும், கர்நாடக அரசு உத்தரவிட்டால் இவ்வழக்கில் ஆஜராக தயார் என்றும் ஆச்சார்யா விருப்பம் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com


























ஒரு நீதிபதியின் கவனக்குறைவால் வந்த வினை!. கவனக்குறைவு காரணமானதா அல்லது காரியமானதா என்று மேல்முறையீட்டில் தெரிந்து விடும்.
நீதியரசர் மிக “கவணமாக” பரிவர்த்தனை செய்துள்ளார் …………
இந்த வழக்கு பற்றி நம் நாட்டு 3 ஞாயிரு இதழ்களின் கருத்து படித்தேன் .
2 இதழி னர் கருத்து தெளிவாக அறிவுப் பூர்வமாக சொல்லப்பட்டிருந்தது . இன்னொரு பசுத்தோல் போர்த்திய பச்சோந்தி யாரைக்கவர இப்படி
கேவலமான …நீதிக்கு ஒவ்வாத கருத்துக் கூற முனைந்ததோ யான் அறியேன் .
தமிழ் நாட்டு மக்களில் தான் பாதிக்கு மேற்பட்டோர் ,அறிவிலிகளாக நாட்டு நடப்பே அறியா பேதைகளாக , தான் கொண்ட தலைமை செய்யும் யாவுமே சரி என்னும் மூடர்களாக இன்னும் கொண்டாடிக்
கொண்டிருக்கிறார்கள் என்றால் ,இங்கும் விவரம் தெரிந்த (உண்மையில் தெரிந்தவரா ?) பத்திரிக்கை நடத்துனர் இவ்வளவு தரம் தாழ்ந்து போற்றுகிறார் என்றால் …???
இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட வழக்கின் தீர்ப்பை சொல்லும்
நீதிவான் (18 ஆண்டுகளாக இழுக் கடிக்கப் பட்ட வழக்கு ) முகாந்திரம்
இல்லாமலா இப்படி …,இவ்வளவு விரைவில் ஒரு தீர்ப்பை சொல்லுவார் ???
இவரின் நேர்மையே கேள்விக்குறியாகி விட்டதே !!!
இவருக்கு முன் தீர்ப்பெழுதிய நீதிபதி என்ன வீணே ஒருவரை பழி
சொல்லவா தீர்ப்பு எழுதினார் ?
இந்த அம்மா பண்ணிய தில்லாலங்கடி ஒன்றா …இரண்டா ?
அறிவிலிகள் தான் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள் என்றால் நம் நாட்டிலும் இப்படி ஒரு அறிவிலியா ??? ( தொடரும் )
இந்த அம்மா செய்யும் ஒவ்வொன்றும் பச்சை தில்லுமுல்லு !
செய்த பின் நான் இல்லை என்பார் (டான்சி நில வழக்கு ),என் கை எழுத்தில்லை என்பார், ஆதாரப்பூவமாக நிரூபணம் ஆனால், நிலத்தை
திரும்ப ஒப்படைக்கிறேன் …என்பார் …,இதையும் கேடுகெட்ட மக்கள்
ஏற்றுக்கொள்ளுவார்கள் !!!
இப்படி ஒரு சாதாரண குடிமகன் செய்தால் இந்த கேவலமான மக்கள்
ஏற் பார்களா ? இப்படி இவர்களுக்கே நேர்ந்திருந்தால் …? கம்பி எண்ணிக்கொ ண்டிருப்பார்கள் !
இந்திய நீதிமன்றங்களே கேளிக்குரியாக இருக்க மக்களும் அப்படித்
தானே இருப்பார் ?
குற்றமே நிரூபிக்கப்படாமல் சிலர் ஆண்டுக் கணக்கில் விசாரணைக்
கைதியாக சிறையை அடைத்துக் கொண்டிருப்பதாக அவர்களே கொடுக்கும் வாக்கு மூலம் !!!
ஆனால் பணபலம் கொண்டோர் வெளியே ???
மற்றவர்களை ஊழல் பெருச்சாளி என்றவரின் உண்மை நிலை என்ன ?
இதையும் போற்றிக்கொண்டாட ஒரு அறிவில்லா மடக்கூட்டம் !!!
எவ்வளவு உயர்ந்த பொறுப்புக் கொண்ட நீதிபதி இப்படி கேவலமாக
இழி மனிதராக … செய்தது …,, அறியா தவறல்ல !
சருக்கிவிட்ட நீதி !
வேசி தான் பணத்திற்கு விலை போவாள் !
உண்மையிலேயே அங்குள்ள மக்கள் இவ்வளவும் அம்பலத்திற்கு
வந்த பின்பும் வரும் தேர்தலில் பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளியை வெற்றிபெறச் செய்வார்களேயானால் …,பணத்திற்கு
விலை போகும் வேசிக்கும் இவர்களுக்கும் வேறுபாடு ஏது?
உங்கள் கேடு கெட்ட வாழ் நிலைக்கு நீங்களே யன்றி வேறு யாரையும்
நொந்து பயன் இல்லை !!!
இன்னும் எத்தனைக் காலம் ???
நான் தவறே செய்யவில்லை என்று அம்மா அடித்துக் கூறினார். தமிழகமே அவர் புனிதமானவர் என்று சொல்லி தமிழகத்திலுள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்குச் சென்று பிரரர்த்தனைச் செய்தனர். அம்மா குற்றாச்சாட்டிலிருந்து விடுதலையானார். மக்களின் முதல்வர் என்று போய் முதலமைச்சரானார். மீண்டும் புதிய பிரச்சனை தலை தூக்குகிறது! மக்களிடம் பொய் சொல்லலாம்! அவர்களுக்கு எது பொய் எது உண்மை என்று தெரியாது! ஆனால் கடவுளிடம் பொய் சொன்னால் அடுத்த அடி பெரிய அடியாக இருக்கும்; அவமானப் படும் படியாக இருக்கும்!
நீதிபதியின் கவனக்குறைவாக இருக்க முடியாது. 100 கோடி யில் எத்தனை கோடி அவனின் வங்கி கண்ணக்கில் இருக்கிறதோ?
ஆனாலும் இன்றைய நிலையில் எதுவும் நடக்கும்.
பதவியில் உள்ளவர்களுக்கு அவமானம் என்று ஒன்று இருப்பதே தெரியாது- அப்படி இருக்கையில் எப்படி அவமானப்பட முடியும்? இந்தியாவில் உள்ளவர்களின் அதுவும் பணம் பதவியில் உள்ளவர்களின் மன நிலை தெரியவேண்டுமானால் TIMES NOW என்ற தொலைக்காட்சி ஒழி அலையில் பார்த்தால் புரியும்- வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.
மீண்டும் மீண்டும் பொய் சொல்வதால் பொய் மெய்யாகி விடாது கடவுளுக்கு நிகரான நீதியே தடும் (தடம் )மாறும்போது ஆண்டவனால் கூடதமிழகத்தை காப்பாற்ற முடியாது கிணற்றுதவளைகள் எல்லாம் நாடக மேடை அதில் எங்கும் நடிகர் கூட்டாம் !
இந்திய நீதித் துறை /நீதி மன்றம் உலகமே தூற்றும் கேவல
நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது !!!
தண்டனை விதிக்கப் பட்டவன் …,இலகுவாக வெளியே உலா வருகிறான் ? குற்றமே நிரூபிக்கப் படாத எளியோன் தண்டனை அனுபவிக்கிறான் ?
இது தான் இந்திய நீதியோ ???
இவ்வளவு கேவலமான நீதித் துறையா ?
குற்றவாளி என நிரூபிக்கப் பட்ட பணபலம் கொண்ட நடிகன் வெளியே ?
நாளை இந்த அம்மாவும் பணமே தான் கடவுளடா … என்றலையும்
கேவலமான நீதிமன்றத்தையும் விலை பேசி விடுவார் !!!
அதற்கு பால் குடமென்ன …,அக்னி சட்டி என்ன …,?அபிஷேக ஆராதனைகளுக்கு பஞ்சம் இருக்காது ! யாகம் வளர்க்க சாமியார்கள்
யாவும் பண மயம் …பண மயம் ???
நாடு நாசமாய் போனால் எவனுக்கு வருத்தம் ?அது தான் நல்லவன் எல்லாம் கண் மூடி …வாய் மூடி இருக்கிறானே ?
இந்த வழக்கு தீர்ப்பு பற்றி சிலர் புலம்பிக் கொண்டிருக்கும் வேளை
அவசர கதியாக பதவி ஏற்ப்பு நடந்த சமயம் …எத்தனை கேவலமான
பெரிய மனிதர் என்போர் …அதில் கலந்து கொண்டு ஆர்ப்பரித்தது
வெட்கக்கேடு !
நடுநிலையாளர் என்று எண்ணிய சில கோழைகளும்அதிலே இருந்தது காண …,நீங்கள் எல்லாம் இவ்வளவு தானா என காரி உமிழ வேண்டும்
போல் இருந்தது !
உங்களைப் போன்றோர் தலைவர் என்பது இந்த சமுதாய சாபக்கேடு !
அடிமைச் சனங்கள் !!!
நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி …என்று பாரதி பாடியது என்று மாறுமோ ?
பணம் படைத்தவர் குற்றம் இழைத் தால் குற்றவாளி அன்று என்றாகி
விடுமா ?
இத்தனை கோழைகள் கலந்து கொண்டு கேவலமானவர்கள் என்று
வரலாற்று பதிவை உருவேற்றி வைத்திருப்பது …,புதிதாக மலரும்
இளைய தலைமுறை உங்களை தூ வென்று உமிழும் !!!
திருந்துங்கள் …, குற்றம் குற்றமே என்று உதாசீனப் படுத்திப் பாருங்கள் , இந்தியா திருந்தும் !!!
உங்கள் நாட்டில் நீங்கள் காண்பது ஈனப் பிறவிகள் நடத்தும் காழ்ப் புணர்ச்சி கொண்ட அரசியல் !
முந்தய அரசியல் தலைவன் தொடங்கிய நலத் திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டு ,மக்கள் பணத்தை பாழ் பண்ணும் கேவலமான அரசியல் தலைவர்களை ஆதரிக்கும் நீங்களா நல்மக்கள்
மேலை நாட்டானைப் பாருங்கள் ,திருந்துங்கள் !
தேர்தல் நடப்பது உறுதியானால் விலை போகாதீர்கள் ,கட்டாயம் உங்கள் நாடு வளம் பெரும் .
காசேதான் கடவுளுப்பா.. அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா..! என்ற நிலையில்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். சுற்றுப்புற துய்மை , சுகாதார வசதி , மின்சாரம் , குடிநீர் வசதி , முறையான பள்ளி வசதி , சாலை போக்குவரத்து வசதி , குடியிருப்பு வசதி என்று மக்களுக்கு சிந்திக்க நேரமில்லை அவர்களுக்கு வேண்டியது எல்லாம் யார் அதிக பணம் கொடுப்பார்கள், கொடுக்கின்றார்கள் என்பதுதான் முக்கியம் அவர்கள்தான் அவர்களுக்கு கடவுள்..?