உயர் ஜாதி ஆண் மீது நிழல் பட்டதால் ஆத்திரம்: தலித் சிறுமி மீது தாக்குதல்

Street-Dogs-Indiaமத்தியப் பிரதேச மாநிலம் கணேஷ்புரா கிராமத்தில் உயர் ஜாதி ஆண் மீது, தலித் சிறுமியின் நிழல் பட்டதால், அந்த சிறுமியை உயர் ஜாதி பெண் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 13ம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரில், தனது மகள் கிராமத்தில் உள்ள குழாயில் நீர்பிடிக்கச் சென்ற போது, அந்த கிராமத்தில் வாழும் உயர் ஜாதி ஆண் ஒருவர் மீது சிறுமியின் நிழல் விழுந்துள்ளது.

இது குறித்து அவர் தனது குடும்பத்தாரிடம் கூற, அவரது வீட்டில் இருந்து வந்த பெண் ஒருவர், சிறுமியை கொடூரமாகத் தாக்கி, இனி, குழாயில் தண்ணீர் எடுக்க வந்தால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்னும் சில கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இருப்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

-http://www.dinamani.com

TAGS: