பாட்னா: யோகா உண்மையில் ஏழைகளின் பணத்தை தின்று கொழுத்த பெரும் பணக்காரர்களுக்குத்தான் அவசியம் என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் கூறியுள்ளார். லாலுபிரசாத் யாதவ் இது குறித்து மேலும், கூறியதாவது…
‘யோகா வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் தேவையில்லை. ஏன்னென்றால் அவர்களுக்கு உடலில் கொழுப்பு இல்லை. நாட்டில் பல கோடி மக்கள் உண்ண உணவு கூட இன்றி தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு முதலில் தேவை உண்ண உணவும் வாழ்வதற்கு வழியும் தான், நிலம் இல்லாத விவசாயிகள், தொழிலாளர்கள், பால் வியாபாரி, ரிக்ஷாகார்களுக்கெல்லாம் தொப்பை இல்லை ஏனென்றால் அவர்கள் கடின உழைப்பாளிகள், அவர்கள் யோகா செய்ய வேண்டிய அவசியம் என்ன?
பா.ஜ.க தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுக்குத்தான் கொழுப்பு அதிகம் உள்ளது எனவே அவர்கள் யோகா செய்யட்டும் இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.



























சரியாக சொன்னீர்கள்
“யோகா” என்பது உயிர், அது சார்ந்து இருக்கும் உடல் மற்றும் கருவிக் கரணங்களை நீக்கி தன்னை அறியும் நிலைக்கு இட்டுச் செல்லும் யோக நெறி. இஃது வெறும் உடற் பயிற்சி அல்ல. மாட்டுத் தீவனத்திலும் ஊழல் செய்த இந்த ஊழல் பேர்வழிக்கு எப்படி தெரியும் யோகத்தின் மேன்மை!.
உண்மையை உரைத்தீர் திரு லாலு.
inner organ சீர் படுத்தும் யோகாசனம், ஒரு உடல் பயிற்சி மட்டும்மே ! அந்த பயிற்சி ஹிந்துக்களின் வழிபாடு போன்று பிதற்றி வருவதால் மற்ற மதத்தார் இந்த பயிற்சியை மறுக்கின்றனர் ! ஒரு சில நாடுகளை தவிர !
உங்களைப் பார்த்தாலே ஏழைகள் மேல் உங்களுக்கு உள்ள பாசத்தையும், நேசத்தையும், அக்கறையும் தெரிகிறது!
யோகா என்ன என்பதற்கு விக்கிபீடியா கொடுத்த விளக்கம்:
“Yoga (/ˈjoʊɡə/; Sanskrit: योग, Listen) is an Indian physical, mental, and spiritual practice or discipline” . எதற்கு நம்முடையதை நறுக்கி வெறும் பயிற்சி என்று மாற்றி பிறருக்கு தாரை வார்த்துக் கொடுக்கணும்? அதானால்தான் இன்று பொங்கலையும் பண்பாட்டு நிகழ்ச்சி என்று ஒன்றுக்கு மேற்பட்டவர் அர்த்தம் புரியாமலேயே வருடத்திற்கு ஒரு நாளைக்கு பொங்குகின்றனர். இது போதாதுன்னு வேதநாயகம் @ Joshua என்பார் திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்றும், திருக்குறள் கிறிஸ்துவருடையது என்றும், சைவ சித்தாந்தம் இயேசு முன்னமே சொல்லி விட்டார் என்றும் பிதற்றுகின்றார்!. wassup -ல் இதைப் பாருங்கள். நெஞ்சம் குமுறும். இதெல்லாம் எதனால் நடக்கின்றது?. நம்முடைய கலை கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும், சமயத்தையும் நாம் அறியாமல் பிறரின் போக்குக்கு விடுவதால் அவனவன் நம்முடையதை சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விட்டான். கவலைப் படாதீர்கள். இன்னும் கொஞ்ச நாளில் “சிவனும் இயேசும் ஒன்னு அதை அறியாதவர் வாயில் மண்ணு “என்று புது மொழி ஒன்று வந்தாலும் வரும். வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை காரணம் இன்று சாய்பாபாவும், சீரிடிபாபாவும் சிவனும் ஒன்னு என்று சொல்லி இரண்டு சிலைகளையும் பக்கம் பக்கம் வைத்து பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்!. எல்லாம் இந்த கோடரிக் கம்புகளால் வரும் வினை. தயவு செய்து இக்கருத்துக்கு மறு கருத்து எழுதி விடாதீர்கள்.
மாற்று கருத்தை ஏன் மறுக்கவேண்டும் ? பொங்கல் தமிழரின் திருநாள் , அது ஹிந்து திருநாளாக மாற்றியது யார் ? இன்று திராவிட பொங்கலாக மாற்றம் கண்டது யாரால் ? யோகாசனம் ஒரு பயிற்சி , அதை உலக மக்களுக்கு சேர்க்க தமிழர்கள் பாடுபடவில்லை ! மேற்க்கத்திய நாடுகள் உலக மக்களுக்கு சேர்க்கின்றனர் ! ” யோகா” என்று உலக முத்திரை கேட்டு அமெரிக்கர்கள் கேட்டனர் , அதை அமெரிக்கா அரசாங்கம் தள்ளுபடி செய்து விட்டது , தமிழன் எதை செய்தாலும் மானிடனுக்கு சென்றடைவதே குறிக்கோள் கொண்டவன் ,அய்யன் வள்ளுவனின் ”திருக்குரல்” போல் தமிழனின் யோகம் ,சித்தம் ,மருத்துவம் ,உலக மக்களுக்கு சேர்க்காமல் தடுத்தவன் யார் என்று என்னிடம் கேட்டு விடாதிர்கள் !
யோகா என்பதன் பொருளே உயிர் இறைவனுடன் சேர்வதாகும். இதற்கு ஏதுவாக மனம் (mental), வாக்கு அல்லது சொல், காயம் அல்லது உடல் மற்றும் அவற்றைச் சார்ந்து இருக்கும் கருவிக் கரணங்களை (physical) ஒருநிலைப் படுத்தி ஒழுக்கப் படுத்துவது. இதற்கு மனதின் வேகத்தைக் கெடுத்து உடலைச் சார்ந்து இருக்கும் கருவிக் கரணங்களை ஒருநிலைப் படுத்த வேண்டும். இதுதான் யோகா எனும் பயிற்சியின் இலக்கு அல்லது நோக்கம். நோக்கமில்லா வெற்றுப் பயிற்சி திசைகாட்டி இல்லா கப்பலாக போய்க் கொண்டிருக்கும். இறை நம்பிக்கை அற்றவர்களுக்கு யோகத்தின் மறுபகுதி கசாயமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த யோக நெறியின் உண்மையை நம்மிடம் இருந்துக் கற்றுக் கொண்ட மேலை நாட்டவர் உடல் நலம் மனநலம் பெறலாம் என்று போற்றுகின்றனர். யோகத்தின் அதற்கும் மேலான பயனை அறிந்தவர் தமிழரும் இந்தியாவின் மற்ற இனத்தவரும். நாமும் இதை மறந்து விடவில்லை. தமிழர் கண்ட சைவ நெறியில் யோகத்தை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று 8 படிமுறைகளாக நிலைப் படுத்தி உள்ளனர். இது பதஞ்சலி யோகத்திற்கும் சற்று வேறுபட்டதாகும். இருப்பினும் நோக்கம் அல்லது இலக்கு ஒன்றுதான். ஆகையால் உண்மை யோக நெறி, இயமம், நியமம், ஆசனம் ஆகியவற்றோடு நின்று விடுவதில்லை. நாம் அதற்கும் மேலே சென்று சமாதி நிலையில் சிவோகம் காணுகின்றோம். இதனை அறிந்த மேல் நாட்டினர் நம்மை பின் பற்றுகின்றனர். அறியாதோர் வெறும் மன நலம், உடல் நாடி அத்துடன் யோகா ஆசனத்திலேயே நின்று விடுகின்றனர். மாற்றுக் கருத்துகளுக்கு இடமுண்டு. ஆனால் உண்மையை வேற்றுக் காரணங்களுக்காக மாற்றுவதில் எமக்கு உடன்பாடு இல்லை.
தமிழரின் பொங்கல் திருநாளை “இந்து” பொங்கலாக மாற்றியவர். சோதிடத்தை நம்பி வாழும் வைதீக மதத்தை என்னது என்று அறியாமல் அதனைக் கட்டிக் கொண்டு வாழும் தமிழர். அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் இந்து மத கம்பெனியார். இவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் அருச்சகர்கள். தமிழர் பொங்கலை திராவிடர் பொங்கலாக மாற்றியது, பிற மொழி பேசுவோரும் தமிழ் மொழி பேசி, தமிழர் பண்பாட்டை பின்பற்றியதால் வந்தது. இது தமிழரின் ஆணி வேரில் இருந்து முளைத்த கிளை வேர்களின் பரிமாணம். இது காலத்தின் கோலம். இதில் தெளிவானத் தமிழர் தெளிவாகவே உள்ளனர். அதனால் நாம் கவலைப் பட தேவை இல்லை. நம்மைச் சார்ந்தோரை நாம் ஏன் பிரிக்க வேண்டும்?.
யோகா என்பதன் பொருளே உயிர் இறைவனுடன் சேர்வதாகும். // எத்தனை பேர் இறைவனுடன் சேர்ந்தார்கள் ? யோகா ஒரு உடல் பயிற்சி மட்டும்மே ! ஒரு வேலை மற்ற பயிற்சியை விட யோகா சிறந்த உடல் பயிற்சியாக இருக்கலாம் ! உடம்பின் அழியில் உடம்பார் அழிவர் திடம்பட மெய் ஞானம் சேரவும் மாட்டார் ! உடலை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பையும் வளர்த்தேன் உயிரையும் வளர்த்தேன் ! திருமூலர் !