ஐதராபாத்தில் பிரசவத்திற்கான கட்டணம் செலுத்தாத பெற்றோரின் குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் விற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜனம்மா என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் மருத்துவ செலவுக்கு பணம் தர மறுத்துள்ளார்.
இதனையடுத்து குழந்தையை மருத்துவமனையிலே வி்ட்டுவிட்டு பணம் திரட்டுவதற்காக வெளியில் சென்ற ஜனம்மா, சில நாட்கள் கழித்து பணத்துடன் திரும்பி வந்து குழந்தையை கேட்டபோது அவரது குழந்தை 12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது தெரியவந்தது.
பிரசவ பாக்கி கட்டணத்திற்காக மருத்துவமனை நிர்வாகமே குழந்தையை விற்பனை செய்ததும், அதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டதும் பொலிசார் விசாணையில் தெரியவந்துள்ளது.
-http://www.newindianews.com