‘ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக அடையாளப்படுத்திக்கொள்வது, என்னவிதமான சிரமம், சங்கடத்தை ஏற்படுத்துகிறது?”

sathyaraj‘ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது, திரைத் துறையில் என்னவிதமான சிரமம், சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது?”

”நிறைய விஷயங்கள் இருக்கு. ஒண்ணு ரெண்டை மட்டும் சொல்றேன். தேங்காய்ல சூடத்தை வெச்சு கொளுத்தி கேமராவுக்குச் சுத்தி எடுத்துட்டு வருவாங்க. நான் எடுத்துக்க மாட்டேன்னு சொல்வேன். அப்ப சிலர், ‘எங்க மனசு புண்படுமேனு நினைச்சாவது இந்தக் கற்பூரத்தைத் தொட்டு கண்ல ஒத்திக்கலாம்ல’னு கேப்பாங்க. உடனே, ‘என் மனசு புண்படும் கிறதுக்காக நீங்க தேங்காய் சுத்தாம இருக்கலாம்ல’னு திருப்பிக் கேட்டுடுவேன்.

இதேபோல சினிமாவுல இன்னொரு மிகப் பெரிய காமெடி இருக்குது. ஒரு காட்சியில செத்துப்போற மாதிரி நடிச்சா, அப்படி நடிச்சு முடிச்ச பிறகு கேமராவை ஒருமுறை பார்த்து சிரிக்கச் சொல்வாங்க. அதாவது ‘ஆள் சாகலை… திரும்ப எந்திரிச்சு சிரிச்சுட்டார்’னு விதியை ஏமாத்துறோமாம். ஆனா, நான் சிரிக்க மாட்டேன்னு சொல்வேன். ‘இல்ல சார் சிரிச்சிடுங்க’னு விடாப்பிடியா நிப்பாங்க. ‘சிரிக்காட்டி நான் நிஜமாவே செத்துடுவேன்னு பயப்படுறீங்களா?’னு கேட்பேன். யார் என்ன சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு உறுதியா இருப்பேன். எங்க போனாலும் எனக்கு இது பெரிய போராட்டமா இருக்கும். அதே மாதிரி ஈழப் பிரச்னையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால், கண்டிப்பா எனக்கு ஜெயில்தான். அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா, தயாரிப்பாளர்கள் பாதிக்கப் படுவாங்க. அதான் மனசுல இருக்கிறதைக் கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டிய சூழல். அது என் மனசாட்சியை ரொம்ப உறுத்தும்!”

– விகடன் .

Chandran Veerasamy's photo.