தமிழக அரசுக்கு இலங்கைத் தமிழ் தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை போக்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு இலங்கைத் தமிழ் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கைத் தமிழ் தலைவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத்தமிழ் தலைவர்கள் வலியுறுத்தினர்.

வடக்கு மாகாண சபையைப் போல, தமிழக பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்று சிவாஜிலிங்கம் கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: