நரபலி கொடுத்த இடத்தை தோண்ட பொலிசார் ஒத்துழைக்கவில்லை: சகாயம் ஐ.ஏ.எஸ்.

sagayam_001மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட பொலிசார் ஒத்துழைக்கவில்லை என சகாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

கிராணைட் மோசடியில் சிக்கியுள்ள பி.ஆர்.பி.யிடம் ஓட்டுநராக வேலை செய்து வந்த கீழவளவைச் சேர்ந்த சேவற்கொடியான் என்பவர், சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸிடம் புகார் ஒன்றை தெரிவித்தார்.

அந்த புகாரில், மனநலம் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்களை பி.ஆர்.பி. நிறுவனத்தினர் நரபலி கொடுத்து புதைத்துள்ளனர் எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து, அந்த இடத்தில் சகாயம் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆய்வு பணிக்கு பொலிசார் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என சகாயம் ஐ.ஏ.எஸ். கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட பொலிசார் ஒத்துழைக்கவில்லை.

மேலும், அந்த இடத்தை தோண்டும் வரை நான் இந்த இடத்தைவிட்டு செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: