அம்மா உணவகத்திற்கு குப்பை லொறியில் உணவு பொருட்கள்: பொது மக்கள் அதிர்ச்சி

garbage_lorry_001அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை குப்பை லொறியில் துப்புரவு பணியாளர்கள் கொண்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி நகர பேருந்து நிலையம் மற்றும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், அங்கு உணவுக்கு தேவையான அரிசி, பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை கழிவுகள் ஏற்றி செல்லும் லொறியில் துப்புரவு பணியாளர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், தவறு செய்த நகராட்சி அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

குப்பை லொறியில் உணவு பொருட்களை ஏற்றினால் நோய் தாக்கம் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: