ஏப்ரல் 2016 முதல் மது விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படுவதாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலின் போது நிதிஷ் குமார், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று பெண்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து அவர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளார்.
இந்நிலையில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில், கலால் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக உள்ள அப்துல் ஜலில் மஸ்தான் கூறுகையில், இன்னும் 6 மாதங்களில் மாநிலத்தில் மது விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
மஸ்தான் மேலும் கூறுகையில், மதுவிலக்கை முற்றிலுமாக அமல்படுத்த வேண்டுமென தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்கள் பலர் போராடியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் பீஹாரில் வரும் ஏப்ரல் 1ம் திகதி முதல் மது விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.newindianews.com
தமிழ்நாட்டிலும் மதுவை ஒழிக்க வேண்டுமானால், இந்த ஜலில் மஸ்தான் மாதிரியான நபர்கள் இருந்தால் முடியுமோ?
தமிழ் நாட்டில் மது ஒழிப்பா?
நடக்காது
எங்கள் தட்ச்சனமுர்த்தி குடும்பத்திற்கும் தான் எல்லா சாராய ஆலைகளும் சொந்தம் ..பக்கெட்டில் அடைத்து இலவச மதுவை பரப்பியவர் எங்கள் தலிவர் …கண்மணிகளுக்கு மதுவை விற்றே …ஆசியாவில் பணக்கார வரிசையில் இன்று தலிவர் …சும்மாவா …
தமிழ் நாட்டில் பூர்ன மது ஒழிப்பு வரவேற்க்கத்தக்கது அதுவும் ஏப்ரல் 1ஆம் தேதி ஏப்ரல் பூலாகமல் இருந்தால் சரி !
நாம் தமிழர் இயக்கமும்.மது ஒழிப்பு கொள்கையை அடுத்த தேர்தலில் முன்வைத்தால் தமிழக பெண்கள் வரவேற்ப்பார்கள்.
சினிமா நடிகர்களால் ஆளப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடு. சினிமா நடிகர்கள் “தண்ணி”க்குப் பேர் போனவர்கள்! அவர்கள் பெற்ற இன்பம் தமிழகமும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். தமிழனே மாறினால் ஒழிய மது மாறாது என்றே தோன்றுகிறது!
இந்தியாவில் மதுவை ஒழிக்கமுடியாது— அவ்வளவு ஊழல்– திரைப்படங்கள் மது விநியோகத்தை பெரிதாக விளம்பரப்படுத்து கின்றன. எல்லா திரைப்படங்களிலும் குடியும் கூத்தும் தலை விரித்து ஆடுகிறது– இதை பெரும்பாலும் தமிழ் நாட்டு தமிழர்கள் தான் விரும்புகிறார்கள்– இந் நிலையில் எப்படி மது விளக்கு கொண்டு வர முடியும்?
கள்ள சாராயம் அரசியல் வாதிகளையும் காவல் துறையினரையும் பெரிய பணக்காரர் ஆக்கி விடும். அங்கு முறையான பகுத்தறிவுள்ள கல்வி முறை கட்டாய மாக்கப்பட வேண்டும்,
தமிழர்கள் இடையே மது ஒழிய வேண்டும் எனில் தமிழ் பெண்கள் யாவரும்ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு .
ஆண்கள் குடிப்பதே இந்த பாழாப்போன பெண்களாலேதான்,கருணை கொலை வரை துணிந்து விட்டனர் பாவம்,
நாராயண நாராயண.
ஒவ்வொரு நாட்டிலும் கல்வி என்பது அரசாங்கத்தின் கடமை. மது விற்பனை என்பது தனியார் தொழில். ஆனால் தமிழ் நாட்டில் மது என்பது அரசாங்கத்தின் கடமை ஆகிவிட்டது. கல்வி தனியார் மயமாகி விட்டது! அரசாங்கத்தின் கஜானாவை நிரப்ப மதுவே தலையாய வருமானமாகத் திகழ்கிறது! அதனால் தான் சினிமா, சீரியல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் அரவணைப்போடு குடிப்பதை கொள்கையாகக் கொண்டுவிட்டன! இன்று தமிழன் குடிக்காவிட்டால் டாக்டர் அம்மா ஆட்சி நடத்த முடியாது! குடியை எதிர்த்தால் தேச நிந்தனை சட்டம் பாயும். அது ஒரு பாடகர் மேல் பாய்ந்துவிட்டது!