டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்திய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

tasmacவெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்திய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வை காக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 60 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

-http://www.dinamani.com

TAGS: