பதன்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் யார் என்று கண்டுபிடிப்பு

punjab_attack_001பதன்கோட் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பதை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை தகர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2ம் திகதி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 7 இந்திய ராணுவ வீரர்கள் கொள்ளப்பட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு, நடத்திய தீவிரவாதிகள் யார், யார் என்பதை உளவுத்துறை கண்டறிந்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ராவுப் அஸ்கார் மற்றும் அஷ்பாக், காசிம் ஆகிய நான்கு பேரும் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் அப்துல் ராவுப் அஸ்கார், கடந்த 1999–ம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தை காட்மாண்டிலிருந்து காந்தகாருக்கு தீவிரவாதிகள் கடத்திச்சென்றதில் மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் நாட்டிடம் இந்தியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 15ஆம் திகதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுப்பதைப் பொறுத்தே பேச்சுவார்த்தைக்கான அடுத்தக்கட்ட  நடவடிக்கை பற்றி முடிவு செய்யமுடியும் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: