சென்னை: தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்த கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது என்று பாதிக்கும் லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் தலையானது எது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை, லஞ்சமும், ஊழலும் என்று 36.1 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அன்னா ஹசாரே, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோரின் லஞ்சத்திற்கு எதிரான போராட்ட தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளதே கணிசமானோர் இவ்வாறு கூற காரணம் என தெரிகிறது.
அதேநேரம், பெரிய அளவில் வர்ணிக்கப்பட்ட மதுபானத்திற்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் நமத்துப்போயுள்ளது இக்கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது. மதுபானம் முக்கிய பிரச்சினை என்று, 14.2 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
மின் வினியோகம் முக்கிய பிரச்சினை என்று, 12.5 சதவீதம்பேர்தான் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா அரசு சற்று பெருமூச்சுவிட இந்த கருத்து உதவும்.
குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதுதான் முக்கிய பிரச்சினை என்று, 14.2 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
அதேநேரம், எத்தனை பிரச்சினை இருந்தாலும், அதை எந்த கட்சி ஆட்சியும் தீர்க்கப்போவதில்லை என்று 56.4 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு இருக்கும் அதிகப்படியான அதிருப்தியை இந்த பதில் புடம் போட்டு விளக்குகிறது.
தமிழருக்கு எதிராக இலங்கை இந்திய வடுக திராவிட தெலுங்கரின் 2016 சதி ஆரம்பம் லக்பிம பத்திரிகையில் அரசியல் கட்டுரை
இலங்கையின் வடுக தெலுங்கு சிங்கள பத்திரிகையான லக்பிம என்ற நாளிதல் ஒரு அரசியல் கட்டுரையை வெளியிட்டுள்ளது…அதனுடைய சாரம்சம் இது தான்…..சிங்களவரான நாம் ஆங்கிலேயன் வெளியேறியதில் இருந்து நின்மதியாக இருந்தோம் எத்தனை இடர் வந்தபோதும் தமிழ்நாட்டு அரசுகள் எமக்கு பக்க பலமாக இருந்து எமது எதிரிகளை தோற்கடிக்க உதவியது..ஆனால் இப்போ இலங்கை சிங்களவருடைய கையில் இருக்க வேண்டுமானால் தமிழ்நாட்டு அரசியல் திராவிட கட்சிகளே ஆட்சி புரிய வேண்டும்..இதற்காக இலங்கை அரசியல் நிலையை கொண்டு திராவிட கட்சிகளுக்கு தேவையான நிதி உதவிகளை இலங்கை அரசு இதுவரை செய்து வந்தது ஆனால் இப்போ ஈழ கோரிக்கை போல் தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் மிக மிக ஆபத்தானது…வை கோபால்சாமி புலிகளுக்கு ஆதரவாக இருந்தாலும் இலங்கைக்கு அதிலும் மேலாக ஆதரவும் உதவிகளும் செய்துள்ளார்…இப்போ ஆட்சியில் இருந்த இரண்டு திராவிட கட்சிகளையும் தமிழர்கள் எதிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வை கோபால்சாமியை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைத்து இலங்கையையும் தமிழ்நாட்டையும் 1948ல் இருந்து இன்றுவரை இருந்தது போல் வைத்திருக்க இலங்கை அரசு தனது புலனாய்வு அமைப்புக்களையும் தேவையான நிதிகளையும் இந்திய மத்தியரசை ஒருங்கிணைத்து வை கோபால்சாமியை வெற்றியடைய வைக்க வேண்டும்..அல்லது வை கோபால்சாமியுடன் கருணாநிதியை இணைத்தாவது 2016 தேர்தலில் திராவிட கட்சி வெற்றி பெற வைக்க வேண்டும்..இது இல்லாது போய் சீமான் தலைமையிலான தமிழர் கட்சி ஆட்சி அமைக்குமானால் அல்லது எதிர்கட்சியாக வருமாக இருந்தால் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் பேரிளப்புக்கள் ஏற்படும் இதனை உடனடியாக இலங்கையாலோ அல்லது இந்தியாவாலோ தமிழ்நாட்டாலோ ஈடு செய் முடியாது இதுவரை காப்பாற்றப்பட்ட இலங்கையும் தமிழ்நாடும் தமிழர்களின் தனித்துவம் மேலோங்குவதை யாரும் தடை செய்ய முடியாது..அதனால் இலங்கை அனைத்துலகத்துடன் இணைந்து தமிழ்நாட்டு திராவிட அரசுகளுக்கு பக்கதுணையாக உடனடியாக தேசிய பாதுகாப்பினூடாக செயல்பட வேண்டும்…இப்படி தொடரும் கட்டுரை எனது நன்பரே மொழி பெயர்த்தார்…சிங்களம் தெரிந்தவர் இருந்தால் கூறுங்கள்
தமிழர்களே தமிழர்களே நாம் வீழ்ந்த வரலாறை அறிந்துகொள்ளுங்கள் ..தன் சொந்த வரலாறு தெரியாத இனம் மீண்டதாக சரித்திரமில்லை .