இந்தியா வல்லரசு ஆக முடியாது: வேண்டும் என்றால் “வல்லுறவு அரசு” என்று தன்னை பதிவு செய்து கொள்ளலாம் !

india_map_001இந்தியா ஒரு காலமும் வல்லரசு ‘Country’ யாக வரமுடியாது….. வேண்டுணுமானால் ஐ.நா.பாதுகாப்பு சபையில் அல்லது ஐ.நா.மனிதவுரிமை பேரவையில் தங்களை ஒரு வல்லுறவு ‘Country’ யாக பதிவு செய்து கொள்ளலாம். பச்சை உடம்புக்காரியை கற்பழிகும் மனிதர் வாழுகின்ற ஒரே இடம் இந்தியாவாகத்தான் இருக்கும். இந்தியாவின் அரியானா மாநிலம் காஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பகதூர்காரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் காவற்துறை அதிகாரி ஒருவரின் மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த இளம் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால், அவர் மருத்துவமனையின் முதல் மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதிகாலை மருத்துவமனை முன்பு சொகுசு கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய நபர் நேராக தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்துள்ளார். அங்கு வரிசையாக படுக்கைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை பார்த்த அவர். அதை பயன்படுத்தி அவர் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் குழந்தை பெற்ற சில மணி நேரத்துக்குள் இந்த சம்பவம் நடந்தது. பிறகு அந்த மர்ம மனிதர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி காரில் ஏறி சென்று விட்டார். அந்த நபர் வந்தது. பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது. அனைத்தும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ளது.

தூக்கம் வர மருந்து கொடுத்திருந்ததால் அந்த பெண் பாதி மயக்க நிலையில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மயக்கம் முழுமையாக தெளிந்ததும் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி கணவரிடம் தெரிவித்தார். அது பற்றி குர்கான் நகர காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது. காவற்துறையினர் மருந்துவ மனை கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம மனிதரை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-http://www.athirvu.com

TAGS: