அரசு பள்ளி மாணவிகள் குளிர் பானத்தில் மதுவை கலந்து குடித்து வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவம் புதுச்சேரியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள், வகுப்பு நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த குளிர்பான பாட்டிலை எடுத்து அருந்தியது மட்டுமல்லாமல் வகுப்பில் இருந்த சக மாணவிகளுக்கும் குடிக்கக் கொடுத்துள்ளனர்.
குளிர்பானத்தை குடித்த மாணவிகள், அடுத்த சில நிமிடங்களில் போதை தலைக்கு ஏற, வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளனர்.இதை கண்ட வகுப்பு ஆசிரியர் பதறிப்போய் சக மாணவியரிடம் விசாரித்ததில், மது போதை மயக்கத்தில் அம்மாணவிகள் மயங்கி விழுந்துள்ளதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே இச்சம்பவம் பற்றி அந்த ஆசிரியர், பள்ளி முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்.
முதல்வர், சில ஆசிரியர்களுடன் சேர்ந்து அந்த மாணவிகளின் மயக்கத்தை தெளிய வைத்து இருக்கின்றனர். அதன்பின் அந்த மாணவிகளை அவர்கள் தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தி இருக்கின்றனர்.அப்போது, ஐந்து மாணவியர் குளிர்பானத்தில் மது கலந்து அருந்தியது தெரியவந்திருக்கிறது. உடனே பள்ளி முதல்வர், அந்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து, உடனே பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல சொல்லி இருக்கின்றனர்.தற்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பள்ளி மாணவியர்களுக்கு மது எங்கிருந்து கிடைத்தது? அவர்களுக்கு மதுவை வாங்கி கொடுத்தது யார்? என்றெல்லாம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களிடம் பரவி வந்த இக்கொடிய பழக்கம், தற்போது மாணவிகளிடமும் பரவி வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
-http://www.athirvu.com
பச்சைத்தமிழர் காமராசருக்கு பிறகு தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திராவிட கட்சிகளின் மற்றுமொரு சாதனை.இருந்த போதும் மானங்கெட்ட தமிழர்கள் தெலுங்கு ஐயாவுக்கும் கன்னட அம்மாவுக்கும் ஓட்டு போடாமல் இருக்கப்போவதில்லை.
தமிழன் போர்வையில் இருக்கிறவனை ஒரு வழி பண்ணனும் ,முதலில்
இதில் ஆச்சரியம் இல்லை குழந்திகளுக்கு கூட மது புகட்டுவதாக செய்திகள் வருகின்றன பிரிட்டிஷ் அரசு அன்று சீனாவை பிடிக்க அபின் பாவனையை ஊக்குவித்தது சென்னார்கள் மத்தியில் ….தமிழ் வியாபாரி ..அரசியலில் நிலைக்க ..மதுவை இலவசமா வழங்கி …தகர தமிழா நாட்டை குடிகாரர சமூகம் ஆக்கினான் ..அதன் விளைவு இது ..அனால் இன்னும் முதல்வர் பதவிக்கு அலையும் இந்த நடமாடும் பிணத்திற்கு …வாழ்க போடா அடிமைகள் உண்டு
மதுக்கடைகளை விஸ்தாரம் படுத்தும் திராவிட கட்சிகளுக்கே மீண்டும் மீண்டும் ஓட்டுப் போட்டு தமிழ் நாட்டையும் உங்கள் வருங்கால சந்ததிகளையும் பாலுங் குழியில் தள்ளுங்கட ஈன ஜென்மங்களே !!
இங்கு மட்டும் என்ன வாழ்கிறது? சீநிவாசணுங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் சம்சு விற்று பணம் பண்ணி நம்ம ராஜாக்களை மடையர்களாக்க வில்லையா? அதிலும் சீநிவாசகன் நடத்தும் எந்த தோட்டத்தில் நல்ல நிலையில் தொழிலாளர்கள் இருக்கின்றனர்? வெள்ளைக்காரன் ஆவது மனிதாபிமானத்துடன் சிறிது சலுகைகளுடன் நம் மக்களை நடத்தினான். சம்பளமே சம்சுவாக இருந்தால்……..?
சிம்புவின் பீப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள் வகுப்பறையில் மது அருந்தி மயங்கி விழுந்த மாணவிகளுக்காகவும் ,மர்மமாகக் இறக்கும் மாணவிகளுக்காகவும் எந்த போர்க்கொடி எடுக்கவும் முன் வரவில்லை இப்பொழுது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வெட்கம் ,,ரோஷம் ,சூடு சொரணை ஒன்றும் வரவில்லையா? மகாக்கேவலம்!!