எதைப் பேசி தமிழன் கெட்டான்..?

tamilacchiஎதைப் பேசி தமிழன் கெட்டான்..?

தமிழ் மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ் மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா..?

தமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா..???

நான் சொல்கிறேன்.., இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய்.. செவிடர்களாய் இருந்ததால் தான் இன்றையத் தமிழன் நாம் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றோம். இதுதான் உண்மை…!

உலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி…இனம்…கலை… பண்பாடு…இலக்கியம்…அறிவுநூல்…
வரலாறு…நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்….!

ஆனால், தமிழன் நாம் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறோம்..!

தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டை விட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறோம்…!

சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி…மொழிவழிஉறவைத் துண்டிக்கிறோம். சொந்த அடையாளத்தை மறைத்து…மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறோம்…!

அதனால்தான் சொல்கிறேன். “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” என்பது வடிகட்டிய பொய்..!

“பழம்பெருமை பேசாமல்..புரியாமல்..அறியாமல்.. தெரியாமல்தான் தமிழர் கெட்டோம்..கெடுகின்றோம்…எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றோம்..!

இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் – அடிவருடியாய் வாழ்கின்றான்..!

இதனை உணர்ந்து இனிக் கண்டிப்பாகத் தமிழைப் பேசுவோம்…!

தமிழின் பெருமை பேசுவோம்…!!

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

http://senkettru.com/…/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%88%e0%ae%a…/

TAGS: