இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை நடுக்கடலில் சிறைபிடித்து சென்றுள்ளனர்

neviஇலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை நடுக்கடலில் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

நேற்று இராமேஸ்வரத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வர்கள் கடலுக்கு மீன்பிடிகக சென்றிருந்தனர். அவர்கள், நேற்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரத்தை சேர்ந்த சிங்கம் லியோன் என்பவரது படகினையும், அதில் இருந்த 6 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் நேற்றிரவு மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததுடன் வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

மீன்பிடி தடை காலம் முடிந்து, ஒரு வார காலத்தில் 4வது முறையாக சிறைபிடிப்பில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், இதுவரை 15 மீனவர்களையும், 4 விசைபடகுகளையும் சிறைபிடித்து சென்றிருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

-http://www.athirvu.com

TAGS: