டிஆர்பி வெறியால் பறிபோன உயிர்: சொல்வதெல்லாம் உண்மையால் தற்கொலை செய்து கொண்ட நபர்

solvethellaamசில தொலைக்காட்சிகள் தொடர்ந்து தங்களின் டிஆர்பியை ஏற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்கின்றனர்.

தற்போது இந்த டிஆர்பி வெறியால் ஒரு உயிர் பறிபோயுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்நிகழ்ச்சி எந்த மாதிரியானது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் நாகப்பன் என்ற நபர் தன்னுடைய மனைவியின் தங்கைக்கும் அவரது பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டது.

ஆனால் அந்த நபர் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று பலமுறை தொலைக்காட்சி நிர்வாகத்திடமும் கெஞ்சியும் ஒளிபரப்பியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது குடும்பத்தினர் இவரது மரணத்துக்கு காரணம் அந்த தொலைக்காட்சி தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

-http://www.cineulagam.com

TAGS: