தமிழகத்திற்கு தண்ணீர் கிடையாது….ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை: சித்தராமையா அதிரடி பதில்

siddharamaiahஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளததாவது,

கர்நாடக விவசாயிகள் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தற்போது கே.ஆர்.எஸ் கபிணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி படுகையில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 24 டி.எம்.சி. நீர் இருப்பு தேவை உள்ளது. காவிரியில் 24 டி.எம்.சி.க்கு குறைவாக நீர் இருப்பு இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடமாட்டோம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தண்ணீர் திறக்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க அரசு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத குற்றத்திற்காக ஆட்சியை கலைத்தாலும் அதற்காக அஞ்சப்போவதில்லை என அதிரடியாக பேசியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: