இந்தியஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்

army-soldiers4காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி பகுதியில் உள்ள இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

இந்தியஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 7 மணி முதல் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சலோட்ரி மற்றும் சக்ரா முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். 4க்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் படையினரும் தக்க பதிலடி கொடுப்பதால் அப்பகுதி முழுவதும் துப்பாக்கி குண்டுகளின் முழக்கமாக உள்ளது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரு ராணுவத்துக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.கடந்த 2 வாரங்களில் மட்டும் பாகிஸ்தான் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் இந்திய வீரர்கள் 8 பேர் பலியாகியுள்ளனர்.இதேபோன்று அத்துமீறி 60 முறைக்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இந்திய ராணுவம் சர்ஜ்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: