துயரத்தில் தமிழகம்! ஒரே நாளில் 7 விவசாயிகள் மரணம்: காரணம்?

farmerதமிழகத்தில் ஒரே நாளில் 7 விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயிரிட்டிருந்த நெற்பயிர் கருகிய அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் விவசாயிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தை சேர்ந்த லாடன், கல்யாணசுந்தரம், முருகையன். சீர்காழியை சேர்ந்த முருகேசன். சிவகாசியை சேர்ந்த அப்பய்யா. விழுப்புரத்தை சேர்ந்த மகாலிங்கம். கடலூரை சேர்ந்த பாலையா ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

பருவ மழை பொய்த்துப் போன நிலையில், பயிர்களைக் காப்பாற்ற போதிய நீர் இல்லாததால் தமிழகத்தில் விவசாயிகள் அதிர்ச்சியில் உயிரிழப்பது தொடர்கிறது. இதைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

-http://news.lankasri.com

TAGS: