நாயை விட நாங்க கேவலமா போய்ட்டோமோ…தலைநகரில் நாதியற்று நிற்கும் விவசாயிகள்

farmer2ஓவ்வொரு மனிதனும் உயிர்வாழ தேவை காற்று, நீர் போல அவசியமானது உணவு. இந்த உணவை உலகுக்கு அளிப்பவர்கள் விவசாயிகள். சில மணி நேரம் சிரிக்க வைக்கும் நடிகனுக்கு இருக்கும் சம்பளமும், மரியாதையும் நம்மை உயிர் வாழ வைக்கும் விவசாயிக்கு இருக்கிறதா என்ற கேள்வி காலம்காலமாக பதில் சொல்லப்படாமல் தான் இருக்கிறது.

யானை கட்டி போரடித்த தமிழக விவசாயிகள் இன்று மழையின்றி பயிர்கள் வாடியதை கண்டு தங்கள் உயிரையும் மாய்த்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் கடனை கட்டமுடியாமல் தவிக்கின்றனர். இதை தள்ளுபடிசெய்யக்கோரி இந்திய தலைநகர் டெல்லியில் இறந்த விவசாயிகளின் மண்டையோடுகளை சுமந்து அரைநிர்வாணமாக 5 நாட்களுக்கு மேலாக வீதியில் போராடுகின்றனர்.

அவர்கள் கதறும் அந்த கொடுமையான வீடியோவை பாருங்கள்.

-manithan.com

TAGS: