இயக்குநர் கவுதமனை கார் ஏற்றி கொல்ல முயற்சி: இருவர் கைது

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இயக்குநர் கவுதமனை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் இயக்குநர் கவுதமன் ஈடுபட்டார். அதே சமயம் தனித்தமிழ்நாடு வேண்டும் என பல பேட்டிகளில் கோரியிருந்தார்.

இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் இரண்டு பேர் இயக்குநர் கவுதமனை கார் ஏற்றி கொல்ல முயன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கவுதமன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனை அடுத்து கொல்ல முயன்ற கெவின், சிவா இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, கொல்ல முயன்றதற்கான காரணம் ஏதும் வெளியாகவில்லை.

-http://news.lankasri.com