செத்த பிறகு எதுக்குயா இது- இளையராஜாவை மேடையில் வைத்துக்கொண்டே பொங்கிய சினேகன்

ilayaraja1சினேகன் தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர். சமீபத்தில் வேலுபிரபாகரன் இயக்கிய ஒரு இயக்குனரின் கதை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் சினேகன் பேசுகையில் ‘இளையராஜா எத்தனை பெரிய சாதனையாளர், அவர் பெயரில் ஒரு பள்ளிக்கூடம் இல்லை, ஒரு தெருவிற்கு அவர் பெயர் இல்லை.

ஆனால், செத்த பிறகு விருதுகளை அள்ளிக்கொடுப்பார்கள், ஒரு சாதனை படைத்த மனிதன் உயிரோடு வாழும் போதே அவரை பாராட்டுங்கள்’ என கோபமாக பேசினார்.

உடனே இளையராஜா மைக்கை பெற்று ‘என் பெயரை ரோட்டிற்கு வைத்தால் காலம் முழுவதும் இளையராஜா நிலைத்து நிற்பாரா?, இல்லை உங்கள் உயிரில் நான் இருக்கிறேன், அது போதும் எனக்கு’ என்று கூறினார்.

-cineulagam.com