இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது! மோடியிடம் பழனிச்சாமி கோரிக்கை

fishermen_bort_001இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 மீனவர்களையும் 136 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடிப்பதற்காக கடந்த 61 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்ட நிலையில் தொழிலுக்கு சென்ற ராமேஸ்வர மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com

TAGS: