குடி, சிகரெட் பழக்கத்தில் என் வாழ்க்கை தறிகெட்டுப்போனது

001காதல் படத்தில் இடம்பெற்ற “நடிச்சா ஹீரோ தான் சார், படிப்படியா சி எம் என்ற வசனத்தை பேசி கவனிக்க வைத்தவர் ‘காதல்’ விருச்சககாந்த்.

கடந்த சில நாட்களாக இவர் சென்னையில் பிச்சை எடுத்து வருகிறார் என்ற செய்தி சமூகவலைத்தளத்தில் வலம் வந்தது. இதை தொடர்ந்து பிரபல நாளிதழ் அவரை தேடி சென்று பேட்டியெடுத்துள்ளனர். பரவலாக பரவப்பட்ட அந்த செய்தி உண்மைதானாம், அவரை சூளையில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தினமும் அன்னதானம் போடும்நேரத்தில் வந்தார்.

அவரிடம் பேச்சு கொடுத்த நிருபர். “அப்பா, அம்மா மறைவுக்கு பிறகு எனக்கு எங்கு செல்வது என்று புரியவில்லை , காதல் படத்துக்கு பிறகு சில வாய்ப்புகள் வந்தது, சில படங்களிலும் நடித்தேன். ஆனால் தேவையற்ற குடி, சிகரெட் பழக்கத்தில் என் வாழ்க்கை தறிகெட்டுப்போனது. இப்போதெல்லாம் படவாய்ப்புகள் வருவதில்லை, அப்படி எதாவது இருந்தால் நான் இங்கதான் இருப்பேன் என்று சொல்லுங்கள் என்றாராம்.

தன நிலைமையை உணராமல் புத்திஸ்வாதீனம் இல்லாத போல் பேசினாராம் காதல் விருச்சககாந்த்.

-cineulagam.com