யாத்திரை சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்: ஏழுபேரின் உயிரை காவு கொண்ட தாக்குதல்

Amarnath-Yatraகாஷ்மீர் மாநிலம் அமர்நாத்துக்கு புனித யாத்திரை சென்ற பயணிகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகழ்பெற்ற பனிலிங்க தரிசன அமர்நாத் யாத்திரை நடைபெறுவது வழக்கம். கடந்த 8ம் திதி முதல் காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி நினைவு தினம் வருவதையொட்டி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் யாத்திரையும் தடை செய்யப்பட்டது.

இந்த ஆண்டுக்கான பனிலிங்க தரிசன அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் திகதி தொடங்கியது. முதல் குழுவாக 4000 பேர் சென்றனர். பின்னர் தான் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக உளவுத்துறை வெளியிட்ட தகவலை அடுத்து இந்தப் பயணம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை காஷ்மீரின், அனந்த்நாக் பகுதியின் அருகே பயணிகள் சென்ற பேருந்தை குறிவைத்து காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த கோர சம்பவத்தில் 7 பயணிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

இதேவேளை, இந்தத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-tamilwin.com

TAGS: