நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோக்களை எடுக்க விரும்பினார் திலீப்.. போலீஸ் விசாரணையில் திடுக்!

dileepதிருவனந்தபுரம்: நடிகர் திலீப்பிடம் இரண்டாவது நாளாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் திலீப் நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோக்களை பெற விரும்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். சுமார் 2 மணி நேர துன்புறுத்தலுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் மலையாளம் மட்டுமின்றி அனைத்து திரைத்துறையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திடுக்கிடும் தகவல்கள்

இதன் விளைவாக அண்மையில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாக மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் முன்னணி நடிகரான திலீப் கைது செய்யப்பட்டார்.

2 நாட்கள் கஸ்டடி

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 2 வாரங்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மீண்டும் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலீப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

நடிகையின் நிர்வாண போட்டோ

அவரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திலீப் நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோ எடுத்து தருமாறு கூறியது அம்பலமாகியுள்ளது.

ஒன்றரைக் கோடி செலவு

இதற்காக 2013ஆம் ஆண்டே திலீப் ஒன்றரைக் கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்றைய இரண்டாம் நாள் விசாரணையில் மேலும் பலத்தகவல்கள் வெளி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பழிவாங்க கீழ்த்தரமான செயல்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாவனாவும் திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியரும் நெருங்கிய தோழிகள் ஆவர். காவ்யா மாதவனுடனான தனது கள்ளக்காதலை மனைவி மஞ்சுவாரியரிடம் தெரிவித்ததால் பாவனாவை பழிவாங்க திலீப் இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com