விவசாய குடும்பத்தை நெகிழ வைத்த தனுஷ்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நடிகர் தனுஷ் பண உதவி அளித்துள்ளார்.

விவசாயிகள் 125 பேரை நேரில் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கியுள்ளார்.

குடும்பத்தோடு தனது குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருந்த நடிகர் தனுஷ், தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 125 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியளித்தார்.

அப்போது பேசிய தனுஷ், விவசாயிகளுக்கான இந்த உதவியை, என் அம்மா பிறந்த இந்த சங்கராபுரம் கிராமத்தில் கொடுப்பதைப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

-lankasri.com