கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த பிரபல நடிகர் மரணம்

nadikarகன்னட நடிகர் துருவ் சர்மா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

வாய் பேச முடியாத இவருக்கு காது கேட்கும் திறனும் கிடையாது. இருப்பினும் தன்னப்பிக்கையோடு திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

இவரது நடிப்பு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 29 ம் திகதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து வந்தன, இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் துருவ் சர்மா மரணம் அடைந்தார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அவருடைய உயிர் பிரிந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

துருவ் சர்மாவின் மரணத்துக்கு கன்னட நடிகர் சுதீப், நடிகை பிரியாமணி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

-lankasri.com