மத்திய, மாநில அரசாங்கங்கள் சேர்ந்து மாணவி அனிதாவை கொன்றுவிட்டன.. சீமான் வேதனை

seeman445சென்னை: நீட் தேர்வுதான் சிறந்த மருத்துவர்கள் உருவாக்கும் என்றால் இதுவரை நாட்டில் உருவான மருத்துவர்கள் சிறந்தவர்கள் இல்லையா என்று சீமான கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவுக்கு நியாயம் கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அரியலூர் செல்ல முடியாதவர்கள் ஆங்காங்கே அனிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியனர் அஞ்சலி

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஒன்றிணைத்து அனிதாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அனிதாவை கொன்றுவிட்டன

இதுகுறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் மத்திய, மாநில அரசாங்கங்கள் சேர்ந்து மாணவி அனிதாவை கொன்றுவிட்டன. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர்.

கல்வியை சர்வதேச சந்தை

நாட்டின் ஆட்சிமுறை கல்வியை சர்வதேச சந்தையாக மாற்றிவிட்டது. நீட் தேர்வால்தான் சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியும் என்றால் இதுவரை உருவான மருத்துவர்கள் யாரும் சிறந்தவர்கள் இல்லையா.

உலக நுழைவு தேர்வு

தேசிய நுழைவு தேர்வை தொடர்ந்து உலக நுழைவு தேர்வு வரப்போகிறது. இந்த உலக நுழைவு தேர்வு வந்தால் இந்தியாவில் யாருமே டாக்டராக முடியாது என்றார் அவர்.

tamil.oneindia.com

TAGS: