பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 55 பேர் கைது

கராச்சி,

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சென்று விடுவதால் அந்த நாட்டின் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் நேற்று  வரையிலான 4 நாட்களில் பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 55 பேரை அந்த நாட்டின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் 9 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் உரிய விசாரணைக்கு பிறகு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 29–ந்தேதி பாகிஸ்தான் ஜெயிலில் இருந்த இந்திய மீனவர்கள் 69 பேரை நல்லெண்ண அடிப்படையில் அந்த நாடு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

-dailythanthi.com

TAGS: