போராட்டங்களுக்கு அஞ்சி 4-வது நாளாக காஞ்சி மடத்துக்குள் முடங்கிய சங்கராச்சாரியார்கள்

காஞ்சிபுரம்: மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சி காஞ்சி மடத்துக்குள் 4-வது நாளாக சங்கராச்சாரியார்கள் முடங்கியுள்ளனர். காஞ்சி மடம் தொடர்ந்தும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்ததற்காக காஞ்சி இளையமடாதிபதி விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனையடுத்து காஞ்சி மடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என சங்கராச்சாரியார்களுக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். இதனால் காஞ்சி மடத்துக்குள்ளேயே அஞ்சி சங்கராச்சாரியார்கள் முடங்கி உள்ளனர்.

இதனிடையே டெல்லியிடம் கெஞ்சி மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜூவை சங்கராச்சாரியார்கள் வரவழைத்தனர். தங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கிறது என காட்டுவதற்காக சங்கராச்சாரியார்கள் இதனை செய்துள்ளனர்.

இருந்தபோதும் பொதுமக்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: