என்னுடைய கூட்டங்கள் ‘பெரியார்’ பாணியில் இருக்கும்: கமல்ஹாசன்

‘எதிர்வரும் 21ஆம் திகதி முதல் நான் நடத்தவுள்ள கூட்டங்கள், தந்தை பெரியார் பாணியில் அமைந்திருக்கும்’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து கேள்விகளைப் பெற்று பதிலளிக்கும் வகையில் கூட்டங்கள் வடிவமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி பத்திரிகையொன்றுக்கு ‘நான் இந்து விரோதி அல்ல’ எனும் தலைமைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலேயே கமல்ஹாசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

-4tamilmedia.com