பாகிஸ்தான் தன்னுடைய முட்டாள் தனமான செயலுக்கு விலை கொடுக்கும் – மத்திய மந்திரி

மும்பை,

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எல்லையில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் தன்னுடைய முட்டாள் தனமான செயலுக்கு விலை கொடுக்கும் என மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர் கூறி உள்ளார்.

மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர் பேசுகையில், “பாகிஸ்தானின் நடவடிக்கையை இந்தியா மன்னிக்காது. பாகிஸ்தான் தன்னுடைய முட்டாள்தனத்தினை உணரும், அதற்கான விலையை கொடுக்கும்,” என கூறி உள்ளார். ராணுவ டாங்கிகளுக்கு எதிரான ஏவுகணைகளை வீசப்பட்டதாக எழுந்து உள்ள தகவல்கள் குறித்து அவர் பேசுகையில், “இதுபோன்ற தகவல்கள் எதுவும் இல்லை,”என கூறிவிட்டார். பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது என்பது உண்மை, அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுக்கிறோம், பதிலடியை விடமாட்டோம்,” என குறிப்பிட்டார். பாகிஸ்தானுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என குறிப்பிட்டார்.

ராணுவ உயர்மட்ட அதிகாரிகளும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளனர்.

-dailythanthi.com

TAGS: