விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளி்யிட்டுள்ள அறிக்கை:
’’விழுப்புரம் மாவட்டம் , திருக்கோவிலூர் அருகேயுள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் அண்மையில் காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது. அதில் சமயன் என்கிற எட்டு வயது சிறுவன் பலியாகியிருக்கிறான். அவனது தாய் ஆராயி என்பவரும் அவனது தமக்கை 13 வயது சிறுமி தனம் என்பவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆராயி கணவரை இழந்தவர். ஐந்து குழந்தைகளுக்குத் தாய். சிறுமி தனம் ‘கூட்டு வன்புணர்ச்சிக்கு’ ஆளாக்கப்பட்டிருப்பது மருத்துவ ஆய்வில் தெரியவருகிறது. மற்ற இருவரும் உயிர் பிழைப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மனநோயாளிகளால் மட்டுமே இத்தகைய மிருகத்தனமான கொடூரத்தைச் செய்யமுடியும். நெஞ்சை உறையவைக்கும் அந்தக் கொடுமை நடந்து நாட்கள் பல கடந்த நிலையிலும் காவல்துறையினர் இன்னும் குற்றவாளிகளைக் கண்டறியவில்லை. வழக்கம்போல் தலித் இளைஞர்களையே சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்ற பல சம்பவங்களில் காவல்துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் வழக்குகளை மூடியுள்ளனர். இவ்வழ்க்கையும் ‘சந்தேக மரணம்’ என விசாரிப்பதாகக் காலம்கடத்தி ஒருவரையும் கைதுசெய்யாமல் வழக்கை முடித்துவிடுவார்கள் என்கிற அச்சமுள்ளது.
உண்மை அறியும் குழுவினர், இந்தக் கொடுரமான வன்முறை வெறியாட்டத்தில் பக்கத்துக் கிராமத்தைச் சார்ந்த இராஜேந்திரன் என்கிற நபர்தான் குற்றவாளி என குறிப்பிட்டுள்ளனர். அவர் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்றும் அவருக்கும் ஆராயி குடும்பத்துக்கும் இடையில் நிலப்பிரச்சினை இருந்தது என்றும் அக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இதுவரையில் இராஜேந்திரன் என்பவரைப் காவல்துறையினர் விசாரிக்கவே இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஈவிரக்கமற்ற இந்தக் கொடூரமான தாக்குதலை, படுகொலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், இந்த வழக்கைக் காவல்துறையினர் விசாரித்தால் நீதி கிட்ட வாய்ப்பில்லை என்பதால் இதனை சிபிஐ விசாரிக்க ஆணையிடவேண்டுமென வலியுறுத்துகிறோம்.’’
-nakkheeran.in


























thamizh
தமிழ் நாட்டில் நடக்கும் அநியாயங்கள் சகிக்கமுடியாதவை- ஆனால் அங்குள்ளோர்க்கு எல்லாமே பழக்கப்பட்டு சொரணை இல்லாமல் போய்விட்டது. பேசவே எரிகிறது. அடிமட்ட மக்கள் பிரெஞ்சு புரட்சி போல் செய்தால் தான் விடுவு ஏற்படும். 70 ஆண்டுகளுக்கு பின்னும் இவ்வளவு கேவலமான நிலை. என்ன சொன்னாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. நல்ல தலைவர்களுக்கு அங்கு பஞ்சம்.எல்லாமே ஊழல் – ஊழல் வாதியை தெய்வமாக்கி சிலை வைக்கும் ஈனங்கள்.
உலகத்தில் நடக்காத அநியாயங்கள் எல்லாம் தமிழ்நாட்டில்தான் நடப்ப்து போல் தெரிகிறது. மனிதத் தன்மை அற்று விட்டது போல் தெரிகிறது. அதனால் தான் அங்கு குடிக்கத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மனிதனை மதிக்கத் தெரியாத மனித ஜடங்கள். வெட்கம், வேதனை.
அங்கு தண்ணீர் கிடைக்காதற்கு அவர்களின் அறிவின்மையும் ஊழல் அரசியலும் தான். அவர்களை முட்டாள்கள் என்று கூறவில்லை. தண்ணீர் வெள்ளம் புரண்டு ஓடும்போது அதை சேமிக்க எவனுக்கும் அக்கறை கிடையாது.அதிலும் அரசியல் வாதிகள் பற்றி கூறவேண்டியது இல்லை. தமிழ் நாட்டை பற்றி மோடிக்கு சிறிதளவும் அக்கறை கிடையாது காரணம் இந்தி எதிர்ப்பு. தற்போதைய ஊழல் தமிழக அரசு கம்பி என்ன பயந்து அவனை தொங்கி கொண்டிருக்கின்றனர். சீனா தெற்கிலிருந்து வடக்குக்கு ஆயிர கணக்கான கல் தொலைவிற்கு தண்ணீரை கொண்டு போக கால்வாய் வெட்டி இருக்கின்றனர்.